அனுமானின் வாலில் குங்குமம் வைத்து வணங்கினால் இவ்வளவு நன்மையா?
அனுமான் கோயிலுக்குச் சென்று அவரை தரிசிக்கும் போது, அனுமானின் வாலில் குங்குமம் வைத்து வணங்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் அது ஏன் என்று அறியாமலேயே அதனை பலரும் மேற்கொண்டு வருகின்றனர்.
அனுமான் சூரியனைக் குருவாக நினைத்து வலம் வந்த போது, மற்ற கிரகங்கள் அனைத்தும் அனுமானின் பின் வலம் வந்தது. இதன் காரணமாகவே அனுமானின் வாலிற்கு பின் ஒன்பது நவக்கிரகங்களும் அமைந்துள்ளது.
எனவே அனுமானின் வாலில் நவக்கிரகங்கள் இருப்பதாகக் கருதப்படுவதால், அனுமானின் வாலின் நுனியில் சந்தனம், குங்குமம் இட்டு 48 நாட்கள் தொடர்ந்து வழிபட்டு வந்தால் நவகிரகங்கள் அனைத்தையும் முழுமையாக வழிபட்டதற்குச் சமமாகும் என்பது ஐதீகம்.
மேலும் அனுமானின் வாலில் பொட்டு வைத்து செய்யும் இந்த வழிபாடானது, நவக்கிரக வழிபாட்டை விட மேலானதாகக் கருதப்படுகிறது.
அனுமான் வாலைத் தொட்டு வழிபடுபவர்களுக்கு, அவர்கள் மனதில் நினைத்து வேண்டிக் கொள்ளும் அனைத்தும் நிறைவேறும்.
நன்றி
Comments
Post a Comment