சக்திமிக்க காளி மந்திரம்

கலியுகத்தில் ஜெபித்த உடன் பலன் தரும் சக்திமிக்க காளி மந்திரம்:

"தக்ஷின காளி மந்திரம்"

"ஓம் க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம்
ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரூம்
தக்ஷிணே
காளிகே
க்ரீம் க்ரீம் க்ரீம்
ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரூம்
ஹ்ரூம் ஸ்வாஹா||

இந்தக் கலியுகத்தில் காளி மந்திரத்தை இடைவிடாமல் இடையூறின்றி
மனம் ஒன்றி ஜபித்தால் உடன் பலிதமாகும்.

காளி எப்போதும் இந்த மந்திர வழிபாட்டை செய்யும்,
உபாசகனின்/தூய பக்தனின் கூக்குரலை எதிர்நோக்கியுள்ளாள்.

மிகவும் சக்தி மிக்க மந்திரம்,
இந்த காளி மந்திரம் என்று மந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இதைஉபாஸிக்க, இந்த மந்திரம் கிடைக்க 72 தலைமுறை புண்ணியம்
செய்தவனுக்கு மட்டுமே இது கிடைக்கும்.

இதை தினமும்108 முறை ஜபம் செய்தால் சாதகனுக்கு உலகில் கிடைக்காதசெல்வங்களே இல்லை என்று கூறுகிறது காளிகா புராணம்.

காளியை வழிபட்டால் சகலயோகங்கள் பெறலாம். காளிவழிபாடு தொன்று தொட்டு நம்மிடையே இருந்து வருகிறது. காளி கோயில்கள் பெரும்பாலும் தனித்தே காணப்படும்.

ஒரு சில சிவன் கோவில்களிலும் காளிதேவி அருள்பாலிக்கிறார். இவள் கலியுக தெய்வம், தன்னை நம்பியவர்களை இவர் கைவிடமாட்டார்.

விரதங்களைக் கடைபிடித்தல், பலியிடுதல், தீ மிதித்தல், ஆகிய வழிபாடுகள் இவரைச் சார்ந்தவை.

 பத்ரகாளி, மாகாளி, பிடாரி, எல்லையம்மன், வடக்குவாசல் செல்வி, ஆயா செல்லியம்மாள், மகமாயி என்றெல்லாம் இவரை அழைப்பர்.

 `காலி' என்று இவரை முதலில் அழைத்தனர். இதற்கு `காலத்தின் வடிவமானவள்' என்று பொருள்.

பின்னர் `காளி' என மாறியது. இதற்கு `கருப் பாவள்' என்று பொருள். சிவபெருமாளை நோக்கி இவர் கடும் தவம் புரிந்து தன் கருப்பு நிறத்தை மாற்றி பொன்னுடல் பெற்றார்.

இதன் பிறகு இவர் `கவுரி' எனப்பட்டார். `கவுரி' என்றால் தங்க உடல் பெற்றவர் எனப் பொருள். நீங்கிய கருப்பு நிறம். `கவுசகி' என்று பெயர் பெற்று மீண்டும் காளியாயிற்று.

சிவபுராணத்தில் காளியை `ஆதி காளி' என்கின்றனர். ஜைன புத்த மதங்களில் 24 பட்சிகளின் பெயர் சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒருத்திக்கு `மகாகாளி' என்று பெயர்.

 அதாவது, காலத்தால் அழிக்க முடியாத தெய்வமாக இவர் விளங்குகிறார்.
பார்ப்பதற்கு பயங்கரமாக இருப்பாரே தவிர, இவரைப் போல குணவதி யாருமில்லை.

சதயம் நட்சத்திரக்காரர்களின் தெய்வம் காளி.

நல்லவருக்கு நல்லவர், கெட்டவருக்கே மகா கெட்டவராக இவர் விளங்குறார்.

காளிதேவியின் பரிகார நூலில் கூறப்பட்டுள்ள ஜோதிட ரகசியம் .....

1)மூன்று காளி தேவியரை ஒரே நாளில் வழிபட 108 சிவ கோவில்கள் வழிபட்ட பலன் உண்டாகும்

2)ஒன்பது காளி தேவியரை ஒரே நாளில் வழிபட 1008 சிவ கோவில்கள் வழிபட்ட பலன் உண்டாகும்

3.ராகு பகவானின் கடுமையான தோசத்திற்க்கு உட்பட்டவர்கள்

1. ஊனமுற்ற பெண் குழந்தைகளை  பெற்றவர்கள் ......
2.தீய பழக்கம் உடையவர்கள் .....
3.பல நோய்களினால் பாதிக்க பட்டவர்கள் .....

இவர்கள் எல்லாம் கால பைரவானின் தாயான காளி தேவியை வழிபட ராகுவின் தோஷத்தில் இருந்து விடுபடுவர்.


நன்றி



Comments

Popular posts from this blog

பெண்களின் பிறப்புறுப்பு இதழ்கள் (கிளிட்டோரிஸ்) பற்றி சில‌ சுவாரஸ்யத் தகவல்கள்!

முக வசிய மந்திரம்