வாழ்வில் செல்வ செல்வாக்கு பெற உதவும் குரு மந்திரம்
குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. நவகிரகங்களில் சுப கிரகமான குருவின் அருள் இருந்தால் ஒருவர் தன் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவது உறுதி என்றே கூறலாம். அதே போல ஒருவருக்கு குரு தோஷம் இருந்தால் திருமண தடை, குழந்தை பேரு அடைவதில் தடை என வாழ்வில் பல தடைகள் இருந்துகொண்டே இருக்கும். குரு தோஷம் உள்ளவர்கள் தடைகளை தகர்தெறியவும், தோஷம் இல்லாதவர்கள் வாழ்வில் மென்மேலும் உயரவும் உதவும் குருவின் மந்திரம் இதோ.
‘ஓம் குரு தேவாய வித்மஹே
பிரம்மானந்தாய தீமஹி
தந்நோ குரு பிரசோதயாத்’
தினம் தோறும் இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக வாழ்வில் பல சிறப்புகளை பெறலாம். குரு தோஷம் உடையவர்கள் இந்த மந்திரத்தை கூறுவதோடு நின்றுவிடாமல் வியாழ கிழமைகளில் விரதமிருந்து குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சார்த்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
நன்றி
Comments
Post a Comment