மரியாதை



*ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார்.*

*ஒருநாள் ஏதோ வேலையாக நடந்துசென்றார்.*

*அப்போது*
*செருப்பு பிஞ்சுபோச்சு..*
*அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார்.*

*அந்த வீட்டுக்காரரை அழைத்து...*

*ஐயா இந்தமாதிரி வரும்போது  என் செருப்பு பிஞ்சுபோச்சு.*
*புதுசெருப்பு வேற.. அதனால இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப்போறேன்...*

*காலையில என் வீட்டு வேலைக்காரனை  அனுப்பி எடுத்துக்கிறேன் என்றார்.*

*அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும் என்றார்.*

*அதற்கு அந்த வீட்டுக்காரர்*
*அந்த செல்வந்தரைப் பார்த்து...*

*ஐயா.. “ நீங்க எவ்வளவு பெரிய செல்வந்தர்..! எங்க வீட்டு வாசலில் உங்க செருப்பு கிடப்பது கூட எங்களுக்கு கௌரவம் தான்.*
*நீங்க தாராளமாக வெச்சிட்டுப்போங்க“ என்று சொன்னார்.*

*அதுக்கு பிறகு அவர் தன்னுடைய வேலைக்காரனை அனுப்பி செருப்பை பெற்று கொண்டார்*

*சில ஆண்டுகள் கடந்தன...*

*ஒருநாள் அந்த* *செல்வந்தரே இறந்து போனார்.*

 *அவரின் இறுதி ஊர்வலம்  செருப்பு வைத்தாரே அந்த வீட்டு வழியே வந்தது.*

*அப்போது நல்ல மழை.⛈*

*பிணத்தைத் தூக்கி வந்தவர்கள் அந்த வீட்டுக்காரரிடம் சென்று...*

*ஐயா சரியான மழையாக இருக்கிறது தூக்கிச்செல்லமுடியவில்லை.*

*அந்த உடலை இங்கு மழை நிற்கும் வரை வைத்துவிட்டு.*
*பிறகு எடுத்துக்கொள்ள அனுமதி தருவீர்களா? என்று கேட்டனர்.*

*அந்த வீட்டுக்காரர் அவர்களிடம் சொன்னார்..*

*ஏன்டா யார் வீட்டுப் பிணத்தை யார் வீட்டு வாசல்ல வைக்கப்பார்க்கிறீங்க? "மரியாதையா எடுத்திட்டுப் போயிடுங்க” என்று..*

*[ அவ்வளவுதாங்க வாழ்க்கை ]*_________________________________

*ஒரு பிஞ்சு போன செருப்புக்கு கிடைக்குற மரியாதை கூட நம்ம செத்த பின்னாடி நம்ம உடலுக்கு கிடைக்காது*

*வாழ்கின்ற கொஞ்ச நாள் எல்லார்கிட்டயும் முடிஞ்ச அளவுக்கு அன்பா வாழ்ந்துட்டு போவோம்...*

*(உயிர் உடம்புக்குள்ள இருக்கும் வரைதாங்க மனுசனுக்கு மரியாதை.               -----------------


நன்றி


Comments

Popular posts from this blog

பெண்களின் பிறப்புறுப்பு இதழ்கள் (கிளிட்டோரிஸ்) பற்றி சில‌ சுவாரஸ்யத் தகவல்கள்!

சக்திமிக்க காளி மந்திரம்

முக வசிய மந்திரம்