Posts

Showing posts from November, 2017

மணம் தளராதே ----- இது மனைவிகளுக்கான பதிவு

ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான்... இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான். அவனுக்கு அன்பும், அழகும் நிறைந்த மனைவி இருந்தாள். அவன் வாழ்க்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக் கொண்டிருந்தது. எல்லாக் கதைகளிலும் வழக்கமாக வருவது போல் நம்ம கொல்லன் வாழ்க்கையிலும் சோதனை காலம் வந்தது. நவநாகரீக காலத்தின் துவக்கமாய் இருந்த நேரம் அது. கொல்லப் பட்டறை தொழில் நலிவுற்றது. வருமானம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்து அன்றாட உணவுக்கே வறுமை என்ற நிலை வந்து விட்டது. கொல்லனுக்கோ ஊடலிலும், காதலிலும் கூட நாட்டம் இல்லாமல் விரக்தி மனதில் குடி கொண்டது. சோகமே உருவாகி விட்டான். ஒரு நாள் மாலை வேளையில் மனைவியின் மடியில் தலை சாய்த்து வானத்து நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தான். மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்து கண்ணீர் துளிகளாய் கரைந்தோடியது. அதைக் கண்ட மனைவி தழுதழுத்து ஆறுதலாய் பேசினாள். "ஐயா எஞ்சாமி எதுக்கு கலங்குறீங்க" இந்த தொழில் இல்லைன்னா என்ன, பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி அதை அக்கம் பக்கத்து கிராமத்துல...

ஆண்களின் முக அழகிற்கு சில

தினமும் இதை ஒரு முறை செய்தால் ஆணழகன் நீதான் ! பெண்களை போலவே ஆண்களுக்கும் சிவப்பாக, அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சொல்லப்போனால் பெண்களை விட ஆண்கள் தான் தங்களது முகத்திற்கு அதிக பாரமரிப்பு தர வேண்டியது அவசியமாகிறது. ஏனென்றால் அவர்கள் தான் மிக அதிக நேரம் வெயிலில் அலைகிறார்கள். அவர்களுக்கு தான் அதிகமாக வெயிலில் அலைவதால், முகம் கருமையாகின்றது. மேலும் தூசி புகைகள் போன்றவை தொடர்ந்து படுவதால் முகப்பருக்களும் வருகின்றன. ஆண்கள் அடிக்கடி முகத்தை கழுவ வேண்டியது அவசியமாகும். எண்ணெய் பசை சருமத்தை கொண்ட ஆண்கள் முகத்திற்கு சோப்பிற்கு பதிலாக பேஸ் வாஷை பயன்படுத்தலாம். முதலில் ஆண்கள் தங்களது முக அழகை பற்றி கவலைப்படாமல் இருந்தார்கள். ஆனால் இப்போது எல்லாம் பெண்களை விட ஆண்கள் தான் தங்களது அழகு விஷயத்தில் அதிகமாக கவனம் செலுத்துகின்றனர். இந்த பகுதியில் ஆண்களின் தோற்றத்தை மேம்படுத்தும் சில அழகுக்குறிப்புகளை காணலாம். சந்தனம் சுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி, இந்த கலவை காய்ந்ததும் முகத்தை கழுவலாம் . சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. இதனால் உங்களது முகம் பொல...

சக்கரை ஒரு நோயே அல்ல

சக்கரை ஒரு நோயே அல்ல! இன்றோடு பயம் போகட்டும் இதோ பூரணமாக கட்டுப்படுத்த வீட்டு வைத்தியம். இன்று பலரையும் தாக்கும் பொது நோயாக சர்க்கரை நோய் உருவேடுத்துக் கொண்டுள்ளது. டீக்கடையில் கூட நடுத்தர வயதினரை கண்டால், டீக்கடைக்காரர் சர்க்கரை கம்மியாக போடவேண்டுமா? என்ற கேள்வியை கேட்ட பிறகே டீ போடுகின்றார். அதற்கு காரணம் நடுத்தர வயதினர் அதிகமாக சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதே. ஏன் பிறந்த குழந்தைக்கே இந்நோய் உள்ளது. இது ஒரு பரம்பரை நோய் என்று தவறாக மக்கள் மத்தியில் பரப்படுகின்றது. நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் தாத்தா, பாட்டி சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார்களா? அல்லது உங்கள் பெற்றோரை கேளுங்கள் அவர்களுடைய தாத்தா, பாட்டி இந்நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தாருகளா? என்று இல்லை ஒரே பதில் மட்டுமே நமக்கு கிடைக்கப்பெறும். அப்படி இருந்தும் ஏன் இப்படி பரப்புகின்றார்கள் என்றால். இன்றைக்கு நாம், நாளை நம் பிள்ளைகள், அதன்பிறகு பேரப்பிள்ளைகள். பேரப்பிள்ளை காலங்களில் இது பரம்பரை நோய் என்றே நம்பப்படும். சர்க்கரை என்பது நோயா என்றால் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சித்த ம...

அன்பும் தன்னம்பிக்கையும்

ஆறு வயது சிறுவன் ஒருவன் தன் நான்கு வயது தங்கையை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான். ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மைகளை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து, "எந்த பொம்மை வேண்டும்?'' என்றான். அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் கடையின் முதலாளியை பார்த்து... ''அந்த பொம்மை என்ன விலை?'' என்று கேட்டான். அதற்கு சிரித்துக்கொண்டே அந்த முதலாளி, ''உன்னிடம் எவ்வளவு உள்ளது?'' என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன்.... தான் விளையாட, சேர்த்து வைத்து இருந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தான்! ''இது போதுமா...?" என்று கவலையுடன் கேட்டான். அதற்கு அந்த கடைக்காரர் அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே...., "எனக்கு நான்கு சிப்பிகள் போதும்!'' என்று மீதியை கொடுத்தார். சிறுவன், மகிழ்ச்சியோடும் மீதி உள்ள சிப்பிகளோடும்.... தன் தங்கையோடு அந்த பொம்மையை எடுத்துக்கொண்டு சென்றான். இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்த அந்த கடையின் வ...

பகவானும் பழைய சாதமும்

சிவாலயங்களில் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் செய்கிறார்கள். இதுபோல் பெருமாளையும் பழைய சாதத்துடன் ஒப்பிடுவார்கள். பழையது சாப்பிடும் பழக்கம் இப்போதும் சிலரிடம் இருக்கிறது. கிராமங்களுக்குப் போனால், முதல்நாள் மீந்துபோன சோறை, தண்ணீரில் போட்டு விடுவார்கள். காலையில் எழுந்ததும், சோறு ஊறிய நீரைக் குடிப்பார்கள். இதற்கு "நீராகாரம்' என்று பெயர். பின், பழைய சாதத்தை சாப்பிடுவார்கள். இது காலை வெயிலைத் தாங்கும் சக்தியைத் தரும். "பழையதும் பகவானும் ஒண்ணு' தான். எப்படி தெரியுமா? பழையதும் விடிய விடிய ஜலத்தில் கிடக்கிறது. நாராயணன் பாற்கடலிலேயே படுத்திருக்கிறார். பழையதை காலையில் சாப்பிட வேண்டும். பகவானையும் காலையில் வணங்க வேண்டும். பழையதைப் போல நாராயணனும் நாரம் (தண்ணீர்) சூழ இருக்கிறார். நாரம் சூழ உள்ளதால் தான் அவனை "நாராயணன்' என்கிறோம். நன்றி

வாழ்வில் செல்வ செல்வாக்கு பெற உதவும் குரு மந்திரம்

குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. நவகிரகங்களில் சுப கிரகமான குருவின் அருள் இருந்தால் ஒருவர் தன் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவது உறுதி என்றே கூறலாம். அதே போல ஒருவருக்கு குரு தோஷம் இருந்தால் திருமண தடை, குழந்தை பேரு அடைவதில் தடை என வாழ்வில் பல தடைகள் இருந்துகொண்டே இருக்கும். குரு தோஷம் உள்ளவர்கள் தடைகளை தகர்தெறியவும், தோஷம் இல்லாதவர்கள் வாழ்வில் மென்மேலும் உயரவும் உதவும் குருவின் மந்திரம் இதோ. ‘ஓம் குரு தேவாய வித்மஹே பிரம்மானந்தாய தீமஹி தந்நோ குரு பிரசோதயாத்’ தினம் தோறும் இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக வாழ்வில் பல சிறப்புகளை பெறலாம். குரு தோஷம் உடையவர்கள் இந்த மந்திரத்தை கூறுவதோடு நின்றுவிடாமல் வியாழ கிழமைகளில் விரதமிருந்து குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சார்த்தினால் நல்ல பலன் கிடைக்கும். நன்றி

இருப்பே இல்லாமல் வாழ முடியுமா ?

இந்த உலகத்தில் உள்ள அணைத்து நோய்களுக்கும் ஒரே மருந்து இருந்தால் எப்படி இருக்கும்?  இதை கேள்வியை உலகில் உள்ள நவீன விஞ்சானிகளிடமோ அல்லது மருத்துவரிடமோ கேட்டால்  இது முட்டாள்தனமான கேள்வி இது சாத்தியமே இல்லை என்பார்கள். ஆனால் இதே கேள்வியை தமிழனிடம் கேட்டால் சாத்தியம் என்பான். ஆம் இதைதான் பல ஆயிரம்வருடம் முன்பே 18 சித்தர்களில் ஒருவரான மாபெரும் தமிழ் சித்தர் போகர்க்கு தோன்றிய சிந்தணையில் உதித்த மருந்துதான்  நவபாஷாணம். இதற்காக அவர் மூலிகைகள் ஆராய்ச்சியில் இறங்கினார்  கிட்டத்தட்ட 4448 மூலிகைளை உபயோகித்து அதை 81 பாஷாணங்களாக மாற்றி இந்த பாஷாணங்களை 9 பாஷாணங்களாக பிரித்து எடுத்தார்.  அவை(கௌரிபாஷானம் , கெந்தகபாஷானம்,சீலைபாஷானம்,வீர ப்பாஷானம்,கச்சாலபாஷானம்,வெள்ளை பாஷானம் தொட்டிபாஷானம்,சூதப்பாஷானம்,சங்குபாஷானம் ஆகும்)இந்த 9 பாஷானங்களை 9 விதமான எரிபொருளை கொண்டு சூடு பண்ணி பூமியில் குழிதோண்டி இந்த 9 பாஷாணங்களை புதைத்து குறிப்பிட்ட நாளில் எடுத்து மருந்தாக மக்களுக்கு கொடுத்தார். இந்த நவபாஷாணம் உலகில் நிறைய இடங்களில் இருக்கு என்று கூறினாலும் நிருபிக்கபட்ட...

மரியாதை

*ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார்.* *ஒருநாள் ஏதோ வேலையாக நடந்துசென்றார்.* *அப்போது* *செருப்பு பிஞ்சுபோச்சு..* *அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார்.* *அந்த வீட்டுக்காரரை அழைத்து...* *ஐயா இந்தமாதிரி வரும்போது  என் செருப்பு பிஞ்சுபோச்சு.* *புதுசெருப்பு வேற.. அதனால இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப்போறேன்...* *காலையில என் வீட்டு வேலைக்காரனை  அனுப்பி எடுத்துக்கிறேன் என்றார்.* *அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும் என்றார்.* *அதற்கு அந்த வீட்டுக்காரர்* *அந்த செல்வந்தரைப் பார்த்து...* *ஐயா.. “ நீங்க எவ்வளவு பெரிய செல்வந்தர்..! எங்க வீட்டு வாசலில் உங்க செருப்பு கிடப்பது கூட எங்களுக்கு கௌரவம் தான்.* *நீங்க தாராளமாக வெச்சிட்டுப்போங்க“ என்று சொன்னார்.* *அதுக்கு பிறகு அவர் தன்னுடைய வேலைக்காரனை அனுப்பி செருப்பை பெற்று கொண்டார்* *சில ஆண்டுகள் கடந்தன...* *ஒருநாள் அந்த* *செல்வந்தரே இறந்து போனார்.*  *அவரின் இறுதி ஊர்வலம்  செருப்பு வைத்தாரே அந்த வீட்டு வழியே வந்தது.* *அப்போது நல்ல மழை.⛈* *பிணத்தைத் தூக்கி வந்தவ...

கல்கி அவதாரம்

கல்கி அவதாரம் எப்பொழுது எங்கு எதற்காக நிகழும்..? கலியுக முடிவில் உலகம் அழியுமா..? 'கல்கி அவதாரம்' குறித்து தவறான கருத்துகள் பலவும் நிலவி வருகிறது. புராணங்களின் துணை கொண்டு அவதார உண்மைகளை உணர்ந்து தெளிவு பெறுவோம். கலியுக முடிவிலேயே 'கல்கி அவதாரம்' நிகழும் என்று புராணங்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன. கலியுகம் 4,32,000 ஆண்டுகளைக் கொண்டது. தற்பொழுது 5,105 ஆண்டுகளே முடிவடைந்து உள்ளது. யுகம் நிறைவு பெற சுமார் 4,27,000 ஆண்டுகள் மீதமுள்ளது. 'சம்பளம்' என்னும் கிராமத்தில் 'விஷ்ணு யசஸூ' என்ற வேதியருடைய இல்லத்தில் பாற்கடல் வாசனான பரந்தாமன் கோடி சூர்ய பிரகாசமாய் கல்கி அவதாரம் எடுத்து அருளுவார் (ஆதாரம்: ஸ்ரீவிஷ்ணு புராணம்). ஸ்ரீகல்கி, தர்மத்துக்கு விரோதமாக செயல்படும் அனைவரையும் சம்ஹரித்து, உலகம் முழுவதும் வேத தர்மத்தை நிலை பெறச் செய்தருளுவார். தர்மத்தை நிலை நிறுத்துவதே இறை அவதாரங்களின் நோக்கமே அன்றி, புவியை அழிப்பது அல்ல. பிரளயம் கல்பத்தின் முடிவில் மட்டுமே நிகழும். ஒரு கல்பம் 14 மன்வந்திரங்களைக் கொண்டது. ஒரு மன்வந்திரம் 71 சதுர்யுகங்களைக்...

வாழ்க்கை தத்துவம் --- "அழுகண்ணிச் சித்தர் "

மிகவும்_அழகாக_வாழ்க்கையின்_ தத்துவத்தை_கூறியுள்ளார். "அழுகண்ணிச் சித்தரின் “ஊத்தைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி மாற்றிப்பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை மாற்றிப்பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால் ஊத்தைச் சடலம் விட்டே - என் கண்ணம்மா உன் பாதம் சேரேனே..?!" விளக்கம்: இந்த உடம்பு நாற்றம் பிடித்த அழுக்கு உடம்பு. உப்பிருந்த மட்பாண்டம் போல அளறு பிடித்துக் கரைந்து அழிந்து போகும் உடம்பு. இந்த உடம்பின் இயல்பை மாற்றி அழியாத உடம்புடன் பிறப்பதற்கான மருந்து எனக்குக் கிடைக்கவில்லை. அப்படி அழியா உடம்புடன் பிறப்பதற்கு எனக்கு மட்டும் மருந்து கிடைக்குமென்றால் இந்த அழியக்கூடிய ஊத்தைச் சடலத்தை விட்டொழித்து உன் பாதமே தஞ்சம் என்று வந்து விடுவேனே என்று குறிப்பிடுகின்றார். நாகப்பட்டினத்திலே சமாதி அடைந்ததாகச் சொல்லப்படும் "அழுகண்ணிச் சித்தரின்" பெயர் ஏற்பட்டடதிற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. இவரது பாடல்களிலுள்ள அர்த்தங்கள் எமது மனங்களின் சிந்தனைச் சக்கரத்தைச் சுழற்றி வாழ்க்கையின் உண்மைநிலையை சிந்திக்கப் பண்ணுகிறது. இவரது பாடல்கள் ஒப்பாரி முறையில் இருந்தாலும் அப்பாடல்க...

திருச்செந்தூரின் கடலோரத்தில் --- அழகிய வரிகள்

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்! தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்! அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம்! ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும் அன்பர் திருநாள் காணுமிடம்! கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா! குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா! மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று! வாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று! சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும் முகம் ஒன்று! சாதிமத பேதமின்றிப் பார்க்கும் முகம் ஒன்று! நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ண முகம் ஒன்று! நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு! பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா! கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா! நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால் கந்தா!! முருகா!! வருவாய் அருள்வாய் முருகா!! நன்றி

"ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே"

"ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே" என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள் இதோ அதற்கு ஓர் உதாரணம்: அந்த நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான். ஒரு அமைச்சருக்குச் சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான். மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன. அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன். ""ஐயோ நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று சிந்து பாடினார்கள் அதிகாரிகள். "செய்யும் ஊழலை மிகவும் திறமையாகச் செய்திருக்கிறார்கள். இந்த மூவருமே ஊழல் பெருச்சாளிகளா அல்லது விதிவிலக்குகள் ஏதாவது இருக்கிறதா என்பதை அறிய வேண்டும்,'' என்று நினைத்தான் மன்னன். அவர்களை அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான். இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் மீண்டும் அழைக்கப்பட்டார்கள். ""மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்கு களப்பயிற்சி தரப் போகிறேன். உங்களிடம் ஒரு பெரிய சாக்கு தரப்படும். அதை எடுத்துக்க...

விக்கிரமாதித்தன் கதைகள் --- சேனாதிபதி

     தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான்.        பின்னர் கீழேஇறங்கி, அவன் அதைத் தூக்கிக்கொண்டு செல்லும் போது, அதனுள்ளிருந்த வேதாளம், “மன்னா! எந்த இலட்சியத்தை நாடி, இவ்வாறு நடு இரவில் மயானத்தில் என்னை சுமந்து கொண்டு திரிகிறாய் என்பது எனக்குத் தெரியவில்லை. சில சமயங்களில் அறிவில் சிறந்தவர்கள் என்று நாம் கருதும் சிலரது ஆலோசனைகள் நம்மைத் தவறான பாதையில் அழைத்துச் செல்லக் கூடும்! அவ்வாறு, அறிவிற்சிறந்தவர் என்று தான் கருதிய மந்திரியின் சொல் கேட்டு, தவறிழைத்த மன்னன் ஒருவனது கதையை உனக்குக் கூறகிறேன்!” என்று சொல்லிவிட்டு, தன் கதையைத் தொடங்கியது.        மகிபாலன் என்ற மன்னன் தனது முதல் மந்திரியான தர்மசீலரின் ஆலோசனைப்படி ஆட்சி செலுத்தி வந்தான்.          ஒரு சமயம், அவனுடைய சேனாதிபதி திடீரென இறந்து போக, புதிய சேனாதிபதியை நயமிக்கும் பொறுப்பை மகிபாலன் தர்மசீலரிடம் ஒப்படைத்தான். உடனே தர்மசீலரும் நாடெங்கிலும் உள்ள பல வீர இளைஞர்களைத் ...

உங்கள் தலையெழுத்து மாற வேண்டுமா ?

#தலையெழுத்தை_தலைகீழாக_மாற்றும்_அதிசய_கோயில்! என்னடா வாழ்க்கை இது என்று அலுத்துக்கொள்பவரா நீங்கள். நாமலாம் எதுக்கு பொறந்தோம்னே தெரியல. இந்த வாழ்க்கை இல்லாம வேற வாழ்க்கை கிடச்சிருந்தா சந்தோசமா இருக்கலாம்னு நினச்சிட்டு இருக்கீங்களா. கவல படாதீங்க அப்படி ஒரு வாய்ப்பு வழங்குகிறது ஒரு இடம். பிரம்மபுரீஸ்வரர் கோயில் திருச்சி அருகே திருப்பட்டூரில் அமைந்துள்ளது பிரம்மபுரீஸ்வரர் கோயில். இந்தியாவிலேயே மிக சொற்ப இடங்களில் இருக்கும் பிரம்ம தேவனுக்கான கோயில்களில் இது சிறப்பானதாகும். எப்படி செல்லலாம்? திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 25 கிமீ தொலைவில் சிறுகனூருக்கு மிக அருகில் அமைந்துள்ளது திருப்பட்டூர் கிராமம். இங்குள்ள பிரம்ம கோயிலுக்கு அப்படி ஒரு ஆற்றல். பிரம்மதேவர் உங்கள் தலையெழுத்தை எழுதியவர் பிரம்மதேவர். அப்படியானால் அவர்தானே அதை மாற்ற வேண்டும் என்கின்றனர் உள்ளூர் பக்தர்கள். வெறும் வாய்வாக்காக அல்லாமல், இங்கு சென்றுவந்தவருக்கு நிச்சயம் மாற்றம் நிகழும் என்கிறார்கள் அவர்கள். திட்டமிடமுடியாத திட்டம் இந்த கோயிலுக்கு செல்லவதே திட்டமிடமுடியாததாம். அதாவது நீங்கள் திட்டமிட்டு இந்த...

சுய இன்பத்தின்போது (பெண்களுக்கு மட்டும்)

சுய இன்பம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒன்று தான். பொதுவாக ஆண்கள் மட்டுமே சுய இன்பத்தில் ஈடுபடுவதாக எல்லோரும் நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறான ஒன்று. கல்லூரிப் பெண்கள் முதல் குடும்பத்தில் உள்ள திருமணமான பெண்கள் வரை பெரும்பாலானோர் சுய இன்பத்தில் ஈடுபடுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அப்படி சுய இன்பம் செய்யும் பெண்கள் பொதுவாக சில தவறுகளைச் செய்கின்றனர். பொதுவாகவே சுய இன்பம் மேற்கொள்ளும் பெண்கள் ஆரோக்கியம் பற்றி யோசிக்காமல் தங்களுக்கு தோன்றும் வகையில் எதையாவது செய்துவிடுவது உண்டு. அது அந்தரங்கப் பகுதியில் அலர்ஜி, அரிப்பு போன்றவற்ரைற ஏற்படுத்திவிடும். சுய இன்பம் என்பது சாதாரணமான ஒன்று தான். பெண்கள் சுய இன்பம் காணும் போது, கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பெண்ணுறுப்பு மிகவும் மென்மையான பகுதி. அதில் தேவையில்லாமல் சில பொருட்களைப் பயன்படுத்துவதால், பாக்டீரியா தொற்றுகள் உண்டாகும். பெண்ணுறுப்பை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். சுய இன்பம் மேற்கொள்ளும் முன்பாக, அந்தரங்க உறுப்பபையும் கைகளையும் நன்கு சுத்தம் செய்துவிட வேண்டியது அவசியம். இதுபோன்ற சிறுசிறு ஆரோக...

இரவில் உள்ளாடை இல்லாமல் உறங்கலாமா ?

நாம் அனைவரும் இரவு உறக்கத்தின் போது, நல்ல வசதியான ஆடையை தான் அணிந்து கொள்ள விரும்புகிறோம். அதாவது, நாம் வெளியில் செல்லும் போது அணிந்து செல்லும் ஆடையை விட இரண்டு சைஸ் அதிகமான ஆடையை தான் நாம் இரவில் அணிந்து கொள்ள ஆசைப்படுகிறோம். இதற்கு காரணம் என்னவென்றால், காற்றோட்டமாக இருக்க வேண்டும் என்பது தான். நாள் முழுவதும், இறுக்கமான ஆடைகளை அணிந்து கொண்டிருக்கிறோம்.  இரவிலாவது கற்றோட்டமான ஆடைகளை அணியலாமே என்பது தான் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கும். இரவில் முக்கியமாக பெண்கள் ஏன் உள்ளாடை அணியாமல் உறங்க வேண்டும் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம் பெண்ணுறுப்பு சுவாசத்திற்கு ... கண்டிப்பாக பெண்ணுறுப்பானது வெளிக்காற்றை சுவாசிக்க வேண்டியது அவசியம். இல்லை என்றால் பாக்டிரியாக்கள் அங்கு அதிகரித்துவிடும். ஆனால், நாள் முழுவதும், வேலை நேரங்களிலும், வெளியிடங்களுக்கு செல்லும் போது உள்ளாடை இல்லாமல் இருக்க முடியாது. குறைந்தது இரவிலாவது உள்ளாடை இல்லாமல் இருக்கலாமே..! துணி மெட்டிரியல் உள்ளாடைகள் ஒருவேளை சில்க், நைலான் போன்ற மெட்டிரியல்களால் ஆனாதாக இருக்கலாம். இவ்வாறு இருந்தால், பெண்ணுறுப்பிற்க...

அனுமானின் வாலில் குங்குமம் வைத்து வணங்கினால் இவ்வளவு நன்மையா?

அனுமான் கோயிலுக்குச் சென்று அவரை தரிசிக்கும் போது, அனுமானின் வாலில் குங்குமம் வைத்து வணங்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் அது ஏன் என்று அறியாமலேயே அதனை பலரும் மேற்கொண்டு வருகின்றனர். அனுமான் சூரியனைக் குருவாக நினைத்து வலம் வந்த போது, மற்ற கிரகங்கள் அனைத்தும் அனுமானின் பின் வலம் வந்தது. இதன் காரணமாகவே அனுமானின் வாலிற்கு பின் ஒன்பது நவக்கிரகங்களும் அமைந்துள்ளது. எனவே அனுமானின் வாலில் நவக்கிரகங்கள் இருப்பதாகக் கருதப்படுவதால், அனுமானின் வாலின் நுனியில் சந்தனம், குங்குமம் இட்டு 48 நாட்கள் தொடர்ந்து வழிபட்டு வந்தால் நவகிரகங்கள் அனைத்தையும் முழுமையாக வழிபட்டதற்குச் சமமாகும் என்பது ஐதீகம். மேலும் அனுமானின் வாலில் பொட்டு வைத்து செய்யும் இந்த வழிபாடானது, நவக்கிரக வழிபாட்டை விட மேலானதாகக் கருதப்படுகிறது. அனுமான் வாலைத் தொட்டு வழிபடுபவர்களுக்கு, அவர்கள் மனதில் நினைத்து வேண்டிக் கொள்ளும் அனைத்தும் நிறைவேறும். நன்றி

நாம் செய்யும் வினை திரும்பும்

ரொட்டிக் கடை வைத்திருந்தார் ஒருவர். அவர் கடைக்கு வெண்ணெய் சப்ளை செய்பவர் மீது அவருக்கு வெகுவாக சந்தேகம். தன்னை அவர் ஏமாற்றுவதாக வருத்தம் இருந்தது. அரை கிலோ வெண்ணெய் என்று அவர் தருவது அரை கிலோவே இல்லை. எடை குறைவாக இருக்கிறது என்று குற்றம் சாட்டினார். சண்டை முற்றி ஒரு நாள் நீதிபதி முன் வழக்கு வந்தது. வெண்ணெய் வியாபாரி தன்னிடம் கொடுத்த வெண்ணெய் பொட்டலத்தை நீதிபதி முன் நிறுத்துக் காட்டிய ரொட்டிக் கடைக்காரர்,  "பாருங்கள் 450 கிராம் தான் இருக்கிறது. இப்படித்தான் என்னை பலமுறை ஏமாற்றி இருக்கிறார். இவரை தண்டியுங்கள்" என்று கூச்சலிட்டார். நீதிபதி வெண்ணெய் வியாபாரியை பார்த்து "என்ன சொல்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் 50 கிராம் குறைவாகத் தரலாமா? அது குற்றமில்லையா?"என்று கேட்டார்.  "ஐயா.. என்னிடம் எடைக்கல் கிடையாது. அதனால் 500 கிராம் எடையுள்ள பொருள் ஏதேனும் ஒன்றை எடைக் கல்லுக்குப் பதிலாக பயன்படுத்துவது வழக்கம். பெரும்பாலும் இவரது கடை ரொட்டியைத் தான் வாங்குகிறேன். அதையே அவ்வாறு பயன்படுதுவேன். பாக்கெட் மீது எடை 500கிராம் என்று எழுதப்பட்டிருப்பதை நம்பி இவரது ரொட்டியை...

சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க

சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க ...   ஒரு  சிறந்த பரிகாரம். ஏழுதலைமுறைக்கு  முன் செய்த பாவங்களும், இந்த தலைமுறையில் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும்.  தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம் எவர்  ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு  திரும்ப கிடைப்பது  அவருக்கு ஜாதகப்படி மோசமான      தசா புக்தி நடக்கும் காலங்களில் அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில்  சனி பகவான் , தயவு , தாட்சண்யமின்றி  கொடுமையாக தண்டிக்கிறார்....... கீழே கொடுக்கப் பட்டிருக்கிற விஷயம் யாரும் சனியோட கடுமையால பாதிக்க படக்கூடாதுங் கிறதுக்காக.  ஒரு சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம்.. சனிக்கிழமையன்று     பச்சரிசியை    ஒரு கையில் அள்ளி அரிசியாக, அல்லது  அதை நன்கு பொடி செய்து, சூரியநமஸ்காரம் செய்துவிட்டு, விநாயகப்பெருமானை   மூன்று சுற்று சுற்றிவிட்டு,  அந்த அரிசியை விநாயகரை சுற்றிப்போட்டால்,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.. அப்படித்தூக்கிச் சென்றாலே  நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்...

சிவ அம்சம் பொருந்திய ஹனுமார்

அனுமார் மிக சிறந்த ராம பக்தர் என்பது உலகறிந்த சங்கதி ஆனால் அவரை சிவ அம்சம் பொருந்தியவர் என்று சிலர் கூறுவது ஏன்? என்று பார்க்கலாம். அனுமார் மிக சிறந்த ராம பக்தர் என்பது உலகறிந்த சங்கதி ஆனால் அவரை சிவ அம்சம் பொருந்தியவர் என்று சிலர் கூறுவது ஏன்? வைஷ்ணவ சம்பிரதாயத்தில் கருடாழ்வாரை பெரிய திருவடி என்று அழைப்பார்கள் அதே போலவே ஆஞ்சநேயருக்கும் சிறிய திருவடி என்ற சிறப்பு பட்டம் உண்டு. ராம அவதாரத்தில் பகவானுக்கு தொண்டு செய்து தாசானுதாசனாக வாழ்ந்ததனால் இந்த சிறப்பை அனுமன் பெறுகிறார். அத்தகைய அனுமன் சிவ அம்சம் பொருந்தியவர் என்பது அதியசயமான உண்மையாகும். திரேதா யுகத்தில் குஞ்சரன் என்ற மகாசிவபக்தன் வாழ்ந்தான். அவனுக்கு வெகுநாட்களாக குழந்தைகள் இல்லை. குழந்தைவரம் வேண்டி அதுவும் ஆண் குழந்தை வேண்டுமென்று சிவபெருமானை நோக்கி அவன் கடுதவம் மேற்கொண்டான். குஞ்சரனின் தவத்தை மெச்சிய கைலாச நாதன் அவன் முன்னால் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். தனக்கு அழகான ஆண்குழந்தை வேண்டுமென்று அவன் சொன்னான். அதற்கு சிவபெருமான் உனது கர்மப்படி ஆண்குழந்தை பெறுகின்ற பாக்கியம் உனக்கில்லை. ஆனால் மகாபதிவிரதை...

அரசனாக இருந்த விசுவாமித்திரர் முனிவராக மாறிய கதை தெரியுமா ?

மிகப் பெரிய முனிவரான விசுவாமித்திரர் ஆரம்பகாலத்தில் அரசனாகவே வாழ்ந்தார். ஆனால் காலப்போக்கில் அவர் முனிவராக மாறினார். அவர் இப்படி மாறியதற்கு பின் ஒரு வியப்பூட்டும் வரலாறு ஒளிந்துள்ளது. அதை ஒரு கதை போல விவரித்துள்ளார் வியாசர். இதோ அந்த கதை. காதி என்றொரு அரசன் இருந்தான். அவனுக்கு ஆண் குழந்தை ஏதும் இல்லை. ஆனால் ஒரு அழகிய மகள் இருந்தால். அவள் பெயர் சத்யவதி. காலங்கள் உருண்டோடின, சத்யவதி திருமண வயதை அடைந்தாள். நற்குணங்களையும் அழகையும் ஒருங்கே பெற்ற அவளை நல்ல வசதியான ஒரு இடத்தில் மணம் முடித்து தரவேண்டும் என்று விரும்பினான் காதி. அதற்கான வேலைகளிலும் அவன் தீவிரமாக இறங்கினான். அந்த சமயம் அரசனை தேடி ஒரு முனிவர் வந்தார். அவர் பெயர் ரிசீகர். அரண்மனைக்கு வந்த ரிசீகர் சத்யவதியின் அழகையும் நற்குணங்களையும் கண்டு வியந்தார். அவளை மனம் முடிக்கவேண்டும் என்று விரும்பினார். தன்னுடைய ஆசையை அவர் அரசனிடம் தெரிவித்தார். இதை கேட்ட அரசனுக்கு என்னசொல்வதென்றே தெரியவில்லை. முடியாது என்று சொன்னால் முனிவரின் சாபத்திற்கு ஆளாகிவிடுவோம் என்பது அவனுக்கு நன்கு தெரியும். ஆனாலும் முனிவரை எப்படியாது தட்டி கழிக்க வேண்ட...

கூலிக்காரன் குபேரனான சம்பவம்

ஏழை ஒருவன் தன்னுடைய தின கூலியை வைத்தே பிழைப்பு நடத்தி வந்தான். ஒரு நாள் அவன் வேலைக்கு செல்கையில் ஓட்டை காலணா ஒன்று தெருவில் இருப்பதை அவன் கண்டான். கீழே கிடைக்கும் ஓட்டை காலணா அதிர்ஷ்டத்தை தரும் என்றொரு நம்பிக்கை இருந்தது. ஆகையால் அவன் அதை அதிர்ஷ்டம் என்று எண்ணி தன் சட்டை பைக்குள் வைத்துக்கொண்டான். வழக்கத்திற்கு மாறாக அவனுக்கு அன்று சற்று வருமானம் அதிகமாகவே கிடைத்தது. அதனால் அவனுக்கு ஓடைகாலனா மீதிருந்த நம்பிக்கையும் அதிகரித்தது. அன்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு சென்றதும் தனக்கு கிடைத்த ஓட்டை காலணா குறித்து தன் மனைவியிடம் சந்தோசமாக விவரித்தான். பின் அந்த ஓடைக்காலணாவை தான் அன்று அணிந்திருந்த சட்டையிலேயே வைத்து அந்த சட்டையில் தனியாக வைத்தான். தினமும் வேலைக்கு செல்லும்முன்பு அந்த சட்டை பையில் இருக்கும் ஓடைக்கலானாவை வெளியே எடுக்காமல் தொட்டு மட்டும் பார்த்துவிட்டு போவான். காலம் கடந்தது அவன் தன் வாழ்வில் படிப்படியாக முன்னேறினான். வீடு, கார் என அனைத்தையும் சம்பாதித்தான். எல்லாம் அந்த ஓட்டை காலணா வந்த ராசி தான் என்று அவன் ஆணித்தரமாக நம்பினான். ஒருநாள் காலை வழக்கம் போல அவன் அந்த ஓட்ட...

நாம் கேட்கும் அனைத்தையும் இறைவன் கொடுத்தால் என்ன நடக்கும்

முனிவர் ஒருவர் பயங்கரமான ஒரு காட்டில் வாழ்ந்துவந்தார். அவரோடு ஒரு நாயும் மிகுந்த விசுவாசத்தோடு இருந்தது. முனிவர் தான் உண்ட காய்கறி, பழங்கள் போக மிச்சத்தை அந்த நாய்க்கு அளிப்பார். அதுவும் அதை மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்தது. முனிவரோடு இருந்ததால் அதற்கு அசைவம் உண்ணும் ஆசை வரவில்லை. ஒரு நாள் திடீரென ஒரு சிறுத்தை அந்த நாயை கண்டு அதை வேட்டையாட துரத்தியது. சிறுத்தையை கண்டு மிகுந்த அச்சம் கொண்ட அந்த நாய் முனிவரிடம் வந்து தஞ்சம் அடைந்து. நடந்தவை அனைத்தையும் அறிந்த முனிவர், பயப்படவேண்டாம் நீ என்னுடைய குழந்தை மாதிரி உனக்கு எந்த ஆபத்தும் நேராமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி ஒரு மந்திரத்தை ஜபித்து தன் கமண்டலத்தில் உள்ள நீரை அந்த நாய் மீது தெளித்தார். உடனே அந்த நாய் ஒரு மிக பெரிய சிறுத்தையாக மாறியது. உடனே அது தன்னை விரட்டி வந்த சிறுத்தையை விரட்டி அடித்தது. சிறுத்தையாக மாறினாலும் அந்த நாய் விசுவாசத்தோடு முனிவரின் காலையே சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தது. ஒரு நாள் திடீரென ஒரு புலி பயங்கர பசியோடு அந்த சிறுத்தையை துரத்த ஆரமித்தது. மீண்டு என்ன செய்வதென்று தெரியாமல் முனிவரிடம் வந்து சரணடைந்தத...

சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம்

சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்த முன்னோர்கள் நமது நாட்டில் வாழ்ந்த சித்தர்களும் ஞானிகளும் எப்போதும் கடவுளை மட்டுமே நினைத்துக்கொண்டு இருக்கவில்லை. அவர்கள் அறிவியலிலும் சிறந்து விளங்கிய ஒரு விஞ்ஞானிகளாகவே வாழ்ந்துள்ளனர். அதற்கு எத்தனையோ சான்றுகள் உள்ளன. அந்த வகையில் வெறும் இரண்டே வரிகளில் சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கும் இடைவெளியை ஒரு பாடல் மூலம் சொல்லி இருக்கிறார் துளசிதாசர். அனுமன் சாலீசாவில் தான் அந்த வரிகள் இடம் பெற்றுள்ளன. இதோ அந்த வரிகள். யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ | லீல்யோ தாஹி மதுர பல ஜானூ பொருள்: இதில் முதல் வரியில் வரும் பானூ என்பதன் பொருள் சூரியன், 1 யுக = 12000 வருடங்கள் 1 சஹஸ்ர = 1000 1 யோஜனா = 8 மைல் 12000 x 1000 x 8 miles = 96,000,000 மைல் 1 மைல் = 1.6 கி மி 96,000,000 * 1.6 = 1,536,000,000 kms நாசாவின் கூற்றுப்படி பூமியில் இருந்து சூரியனுக்கு சரியாக 1,536,000,000 kms தொலைவு உள்ளது என்று கூறப்படுகிறது. ஆக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தொலைவினை கட்சிதமாக கணித...

விக்கிரமாதித்தன் கதைகள் --- " பெருந்தன்மை "

    தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மரத்தில் ஏறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான்.     பின்னர் அவன் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம்,      “மன்னா! இரவு பகலாக இவ்வாறு காட்டிலும், மேட்டிலும் நடு நிசியில் திரியும் உன்னைக் கண்டு பரிதாபமாக இருக்கிறது. ஆனால் நீ தேடும் பொருள் உனக்குக் கிட்டும்போது, அதைக் கை நழுவ விட்டுவிடுவாயோ என்ற சந்தேகமும் எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில், வீரபாகு என்ற ஒருவன் இப்படித்தான் புத்தி தடுமாறி தவறு புரிந்தான். அவன் கதையை உனக்குச் சொல்கிறேன், கேள்!” என்றது.    தண்டகாரண்ய வனத்தில் முன்னொரு காலத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு காட்டுசாதியினர் வசித்து வந்தனர். ஒருநாள், அந்த சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களும், இளம் பெண்களும் ஒன்றுகூடி ஏரிக்கரையில் உல்லாசமாகப் பொழுது போக்கிக் கொண்டிருக்கையில், ஏரியிலிருந்த மீன்கள் துள்ளிக் குதித்து நீரிலிருந்து எழும்பி மேலே வந்து, மீண்டும் ஏரிக்குள்ளே விழுந்து விளையாடிக் கொண்டிருந்தன.    அப்போது,...

இதுதான் மாயை

    ஒருமுறை நாரதர், கிருஷ்ணரைப் பார்த்து, பகவானே, மாயையை எனக்குக் காண்பியுங்கள் என்று கேட்டார். சில நாட்கள் கழிந்தன, ஒருநாள் கிருஷ்ணர் நாரதரைத் தன்னோடு ஒரு பாலைவனப் பயணத்திற்கு வருமாறு அழைத்தார். பலகாத தூரம் நடந்தபிறகு அவர் நாரதரைப் பார்த்து, நாரதா எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது. சிறிது தண்ணீர் கொண்டு வர முடியுமா? என்று கேட்டார். பகவானே உடனே கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு நாரதர் புறப்பட்டார். சிறிது தூரத்தில் ஒரு கிராமம் இருந்தது. அவர் அந்தக் கிராமத்தில் சென்று ஒரு வீட்டின் கதவைத் தட்டினார். அழகான இளமங்கை ஒருத்தி கதவைத் திறந்தாள். அவளைப் பார்த்த மாத்திரத்தில், கிருஷ்ணர் தண்ணீருக்காகக் காத்துக் கொண்டிருப்பதையும், தண்ணீர் கிடைக்காவிட்டால் தாகத்தால் ஒருவேளை அவர் இறந்துவிடக்கூடிய சூழ்நிலையில் இருப்பதையும் நாரதர் மறந்தார். எல்லாவற்றையும் மறந்துவிட்டு அந்தப் பெண்ணோடு பேசத் தொடங்கினார். அன்று அவர் திரும்பிப் போகவில்லை. அடுத்த நாளும் அந்தப் பெண்ணோடு பேசிக்கொண்டே இருந்தார். அவர்கள் பேச்சு காதலாக மலர்ந்தது. இறுதியில் அந்தப் பெண்ணைத் தனக்குத் திருமணம் செய்து கொடுக்குமாறு அவளத...

வெற்றிச்சிந்தனைகள்

ஒருவன் தன்னுடைய தொழிலில் படு தோல்வியடைந்த நிலையில் தான் நடந்து வந்த வழியில், தெரு முனையில் போவோர், வருவோரை மிகுந்த மனவேதனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது எதிரில் உள்ள  குப்பை தொட்டியில் ஒருவர் தனக்கு தேவையான பழைய பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பி சென்றார். சிறிது நேரத்தில் இன்னொரு நபர் அதே குப்பை தொட்டியில் தனக்கு தேவையான  பாட்டில்களை நிரப்பி எடுத்து சென்றார். மீண்டும் ஒருவர் தனக்கு தேவையான பழைய பிளாஸ்டிக் தட்டு, பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பி சென்றார். அதன்பின் ஒரு நாய் வந்து எச்சில் இலையில் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டு சென்றது.கடைசியாக வந்த ஒரு பசு குப்பையில் கிடந்த பச்சிலையை சாப்பிட்டு தன் பசியை போக்கி கொண்டது. இதைப் பார்த்த, படு தோல்வியடைந்த அந்த நபர் கூறிய வார்த்தைகள் , ஒரு சிறிய குப்பை தொட்டியில் இத்தனை பேர் பிழைத்து வாழ்கிறார்கள் என்றால், இந்த பரந்து , விரிந்து கிடக்கும் இவ்வுலகில் நாம் அனைவரும் எப்படி எல்லாம் பிழைத்து வாழலாம் என்று தன் மனதை திடப்படுத்திக்கொண்டு இனி தனக்கு தோல்வியே கிடையாது , இனி வரும் காலங்கள் பொற்காலமே , மிக பெரிய வெற்றியே என ...

ஆம்பூர் பிரியாணி

ஆம்பூர் பிரியாணி தேவையான பொருட்கள் மட்டன் - ஒரு கிலோ பாஸ்மதி அரிசி - ஒரு கிலோ பெரிய வெங்காயம் - 6 தக்காளி - 6 பச்சை மிளகாய் - 6 இஞ்சி, பூண்டு விழுது - 2 1/2 மேசைக்கரண்டி பட்டை - 3 கிராம்பு - 10 ஏலக்காய் - 15 அன்னாசி மொக்கு - 2 மிளகாய் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி தயிர் - 1 கப் எலுமிச்சை - ஒன்று புதினா - ஒரு கப் கொத்தமல்லி - ஒரு கப் உப்பு - 3 மேசைக்கரண்டி நெய்-5 ௩கரண்டி கறிவேப்பிலை - 2 கொத்து ரம்பை இலை= கலர் பொடி செய்முறை அரிசியில் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் மெல்லிய நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீள வாக்கில் கீறி வைத்துக் கொள்ளவும். புதினா கொத்தமல்லி தழைகளை கழுவி வைக்கவும். கறியினை சுத்தம் செய்து மஞ்சத் தூள் போட்டு கழுவி வைக்கவும் அதில் தயிர் பாதி இஞ்சி, பூண்டு விழுது மிளகாய் தூள் கிலரி வைக்கவும் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி மொக்கு போட்டு பொரிய விடவும். உடனே நறுக்கின வெங்காயம் போட்டு பொன்னிறமாகும்...

மஹா சுதர்சன மந்திரம்

மஹா சுதர்சன மந்திரம் சுதர்சன மஹாமந்திரத்தை தினமும் காலையில் சொன்னால், அஞ்ஞான இருள் விலகும். எல்லா பிரச்சனைகளும் மறைந்து போகும். ஆபத்து நீங்கும். பயம் விலகும்.தைரியம் பிறக்கும். சந்தோஷம் நிலைக்கும். ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய  ஸ்ரீம் கோபி ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே!  மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர  ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர  ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா  தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் க்ஷோபன  கராய ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து, சுத்தமான உடை அணிந்து கிழக்கு நோக்கி அமர்ந்து, கண்ணை மூடிக்கொண்டு குறைந்தபட்சம் ஒன்பது தடவை - கூடிய பட்சம் 108 தடவை பாராயணம் செய்தால் அவர்களுக்கு பீடைகள் ஒழியும். சௌபாக்கியம் பிறக்கும். ஸ்ரீராமஜெயம் நன்றி

முக வசிய மந்திரம்

ஜபித்ததும் பலன் தரும் முக வசிய மந்திரம் மானிடராய் பிறந்த அனைவருக்கும் அழகின் மீது எப்போதும் சற்று ஆர்வம் அதிகம் தான். அழகோடு சேர்ந்து வசீகரிக்கும் முகத் தோற்றத்தையும் தரக்கூடிய ஒரு அற்புதமான மந்திரம் உள்ளது. இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக நமது எதிரிகள் கூட நம்மை பார்த்த மாத்திரத்தில் நம்பர்களாக மாறும் அளவிற்கு முகத்தில் வசீகரம் ஏற்படும். இதோ அந்த அற்புதமான மந்திரம். மந்திரம்: ஓம் வெள்ளி என்முகம் வியாழன் என்முகம் திங்கள் என்முகம் திசைகள் எட்டும் என்முகம் காளி என்முகம் காயத்ரி என்முகம் நீலி என்முகம் நீலகண்டி என்முகம் ராமரும் லட்சுமணரும் போலே அம்மா தாயே லட்சுமணர் எல்லோரும் பார்த்தால் போலே சிரித்த முகமும் சீதாதேவியார் நிற்க சிதம்பர அட்சரத்தின் மேல் ஆணை ஐந்தெழுத்து பஞ்சாட்சரமும் என்முகத்தில் நிற்கவே சுவாகா . இந்த மந்திரத்தை முதன் முதலில் ஒரு நிறைந்த பௌர்ணமி அன்று 108 முறை கூறுவது சிறந்தது. அதன் பின் தினமும் 21 முறை கூறி வர நம்மை அறியாமலேயே நம் முகமானது பிரகாசிக்க ஆரமிக்கும். இதன் மூலம் நம்மை காணும் அனைவருக்கும் நம் மீது ஒரு அளவுகடந்த மரியாதை ஏற்படும். எல்லோரும் நம்மிடம்...

குலதெய்வம்

      உங்கள் வீடுகளில் உள்ள பூஜை அறைகளில் உங்கள் குலதெய்வத்தின் படம் தான் முதலில் இடம் பெற வேண்டும். உங்களுக்கு பிடித்த இஷ்டதெய்வத்தின் படம் இருக்கலாம். தேவையற்ற படத்தை மாட்டிவைக்காதீர்கள். எல்லா சாமி படங்களையும் நீங்கள் மாட்டி வைத்தீர்கள் என்றால் நீங்கள் தினமும் அனைவருக்கும் பூஜை செய்ய வேண்டும். உங்களுக்கு இருக்கும் வேலை காரணமாக நீங்கள் தினமும் பூஜை செய்ய முடியாமல் போகும். அதனால் உங்களுக்கு பிரச்சினை வர வாய்ப்பு இருக்கிறது. சில வீடுகளில் கோரமாக இருக்கும் தெய்வங்களின் போட்டோவை வாங்கி வந்து மாட்டிவைக்கிறார்கள் அவ்வாறு செய்வதும் தவறு. அவர்களை சாந்தபடுத்துவது என்பது மிக கடினமான ஒன்றாக இருக்கும்.நீங்கள் எவ்வளவு பணக்காரராக இருந்தாலும் சிலை வழிபாட்டை வீட்டில் அனுமதிக்காதீர்கள். வீடுகளில் சிலை இருக்ககூடாது. பல வீடுகளின் பல சாமி போட்டோ வைத்து இருக்கும் வீடுகளில் எந்த ஒரு தெய்வத்தின் அருளும் இருக்கவில்லை. நான் பார்த்த வரையில் குலதெய்வத்தை பல பேர் மறந்துவிடுகிறார்கள். பல வீடுகளை பார்க்கும்போதே குலதெய்வ அருள் இல்லாமல் இருக்கிறது. குலதெய்வத்தின் அருள் கிடைக்கவில்லை என்றால் ...

கங்கா ஸ்நானம்

       ஒரு  பெண்ணுக்கு   நதிகளின்   மீது  கொள்ளைப் பிரியம்.  அவற்றைத்   தனது   தாய்மார்கள்களாகவே  நினைத்தாள். தன்   வீட்டிலிருந்த   மூன்று   பித்தளை  குடங்களைப்   பளபளவென    துலக்கி   நீரெடுத்து  வைப்பாள்.   அந்தக்   குடங்களுக்கு   கங்கா, யமுனா, சரஸ்வதி   என்று   பெயரிட்டிருந்தாள்... யாராவது    குடிக்க   நீர்   கேட்டால்,  மூன்று   குடங்களில்   இருந்தும்   சிறிதளவு   தண்ணீர்   மொண்டு   கலந்து   'திரிவேணி தீர்த்தம்' என  கொடுப்பாள்.. "குடத்து   தண்ணீரை   'திரிவேணி தீர்த்தம்'  என்கிறாளே!  அப்படியானால்   இவளது   வீடு   என்ன   பிரயாகையா?"   என்று   ஊரார்   கேலி   செய்தனர்..    ஆனால்,   அவள்   அதைக்   கண்டு கொள்ள  மாட்டாள்.    தன்   கருத்தில்   அவள்   நம்பிக்கையுடன்    இ...

வல்லவனுக்கு வல்லவன் உன்டு வைகயத்தில்

 !! வல்லவனுக்கு வல்லவன் உன்டு வைகயத்தில் குருக்ஷேத்திர யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளை. பாண்டவ, கவுரவப்படைகள் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். களத்திலே அன்று வில்லாதி வில்லர்களான அர்ஜுனனும், கர்ணனும் மோதிக் கொண்டிருக்கிறார்கள். அர்ஜுனனுக்கு கண்ணன் தேரோட்டிக் கொண்டிருக்கிறான். தேர் உச்சியில் இருந்த கொடியில், ஆஞ்சநேயர் அழகாய்ப் பறந்து கொண்டிருக்கிறார். அர்ஜுனனும், கர்ணனும் தங்கள் அம்புகளை ஒவ்வொருவர் தேர்களை நோக்கி எய்கின்றனர். அடேங்கப்பா! ஆற்றல் மிக்க அந்த அர்ஜுனனின் அம்பு, கர்ணனின் தேரை முப்பத்தைந்து கல் தொலைவு தள்ளி விழச் செய்கிறது. அர்ஜுனனின் தேரைத் தாக்கிய அம்பு, அதை முப்பது கல் தொலைவில் விழச்செய்கிறது. சுதாரித்து எழுகிறான் அர்ஜுனன். பெருமை பிடிபடவில்லை. ""கண்ணா! பார்த்தாயா! என் அம்பு கர்ணனின் தேரை முப்பத்தைந்து கல் தொலைவில் விழச்செய்தது. அவனது அம்போ, நம்மை முப்பது கல் தான் தள்ளி விட்டது. பார்த்தாயா! என் பராக்கிரமத்தை!'' என்று மார்தட்டிய போது தான், கண்ணன், ""அப்படியா!'' என்றானாம். சொன்னதோடு நின்றானா! ""அர்ஜுனா! எனக்...

மனநிம்மதி -- சிறுகதை

      'என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை' என்றான் ஒரு அரசன்,  ஞானியிடம். 'உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா.?' என்று ஞானி கேட்டார். 'என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை. இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை' என்றான். 'அப்படியானால் ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு' என்றார் ஞானி. 'எடுத்துக் கொள்ளுங்கள்'என்றான் மன்னன். 'நீ என்ன செய்வாய்' என்றார் ஞானி. 'நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்' என்றான் அரசன். 'எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட என்னிடமே வேலை செய். உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா. நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன்.' என்றார். சரி என்றான் மன்னன். ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனை காண வந்தார். ...

சித்தர்கள் செய்த சிறுநீர் பரிசோதனை

     நம்முடைய  சித்தர்கள் எந்த ஒரு  டாக்டரின் துணை இன்றி  அவர்களுடைய சிறுநீரை அவர்களாகவே சோதனை செய்து, என்ன வியாதி இருக்கிறது என்று கண்டுபிடித்துவிடுவார்கள். சித்தர்கள் சிறுநீரைப் பரிசோதித்துப் பார்க்கும் முறை அவ்வளவு கஷ்டமானது கிடையாது. அந்த முறையைப் பயன்படுத்தி நாமே நம்முடைய சிறுநீரைப் சோதனை செய்து தெரிந்து கொள்ள முடியும். நம்முடைய உடலில் உண்டாகும் எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் தான் காரணம் என்று ஆரம்பத்திலே நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர் அதில் எந்த ஒன்று நம்முடைய உடலில் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்து கொண்டாலே போதும் அதை நாம் குணப்படுத்த முடியும். இதைத்தான் நம்முடைய சித்தர்கள் சிறுநீர் பரிசோதனை மூலம் கண்டுபிடித்தனர். இந்த மூன்றும்  சிறுநீரில் எந்த அளவுக்கு உள்ளது என்பதை வைத்து நோயை குணபடுத்தி உள்ளனர் எவ்வாறு செய்யலாம்..? காலையில் எழுந்ததும் சிறுநீரை ஒரு தெளிவான  கண்ணாடி டம்ளரில் எடுத்து அதில் நான்கு சொட்டு நல்லெண்ணெயை அதில் விட்டு சிறுது நேரம் கழித்து பாருங்கள். அறிவியல் ரீதியாக என்ன நடக...