மணம் தளராதே ----- இது மனைவிகளுக்கான பதிவு
ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான்... இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான். அவனுக்கு அன்பும், அழகும் நிறைந்த மனைவி இருந்தாள். அவன் வாழ்க்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக் கொண்டிருந்தது. எல்லாக் கதைகளிலும் வழக்கமாக வருவது போல் நம்ம கொல்லன் வாழ்க்கையிலும் சோதனை காலம் வந்தது. நவநாகரீக காலத்தின் துவக்கமாய் இருந்த நேரம் அது. கொல்லப் பட்டறை தொழில் நலிவுற்றது. வருமானம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்து அன்றாட உணவுக்கே வறுமை என்ற நிலை வந்து விட்டது. கொல்லனுக்கோ ஊடலிலும், காதலிலும் கூட நாட்டம் இல்லாமல் விரக்தி மனதில் குடி கொண்டது. சோகமே உருவாகி விட்டான். ஒரு நாள் மாலை வேளையில் மனைவியின் மடியில் தலை சாய்த்து வானத்து நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தான். மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்து கண்ணீர் துளிகளாய் கரைந்தோடியது. அதைக் கண்ட மனைவி தழுதழுத்து ஆறுதலாய் பேசினாள். "ஐயா எஞ்சாமி எதுக்கு கலங்குறீங்க" இந்த தொழில் இல்லைன்னா என்ன, பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி அதை அக்கம் பக்கத்து கிராமத்துல...