Posts

Showing posts from 2017

இல்லற தர்மம்

இல்லற தர்மம். . கட்டிய மனைவியை கடைசி வரை கண் கலங்காமல் காப்பவன் தவம் செய்ய தேவை இல்லை இருபத்தி ஒரு வயது வரை அவனவன் சொந்த ஆன்ம கர்மா செயலுக்கு வராது அந்த ஆன்மாவின் ஸ்தூல தாய் தந்தை கர்மா வே வழி நடத்தும்  96 தத்துவங்கள் முடிவு பெறுவது இருபத்தி ஒரு வயதிலே அதன் பிறகே அவனது சொந்த ஆன்ம கர்மா செயலில் இறங்கும். சிவமாக இருந்தால் மட்டும் சிரசு ஏற முடியாது சக்தியோடு துணை சேர வேண்டும். சிரசு ஏற பல வழி தியானம் மூலம் பக்தி மூலம் ஞான மூலம் யோக மூலம் தீட்சை மூலம் சிவசக்தி மூலம் இன்னும் எத்தனையோ மூலம் வழி உள்ளது சிரசு ஏற. ஆனால் சிறந்த மூலம் இல்லற தர்மம். சிவம் பிறக்கையிலே அவனுக்கு முன்பே சக்தி பிறந்து விடுகிறது சக்தி மாறி சிவம் சேர்ந்தாலே பிறவியே சிக்கலே மனம் பொறுத்தம் பூமியிலே ஜெயிப்பது இல்லை ஆன்ம பொறுத்தமே பிறவியை ஜெயிக்கும். அந்த சக்தி யோடு சிவம் சேரும் போதே சர்வமும் சாந்தி ஆகும் சிவ சக்தி இடையே ஊடலும் கூடலூம் உற்சாகம் தானே......!!! ஆனால் சக்தியின் கண்ணீருக்கு சிவம் காரணமானால் அதை விட கொடிய கர்மா உலகில் இல்லை ஒருவன் வாழ்...

உண்மையான அன்பு இறைவனை அடையும்

‌ சீதையை மணம் செய்து கொண்டு அயோத்திக்குத் திரும்பினார் ராமபிரான். நாட்டு மக்கள் எல்லோரும் ராமபிரானை வாழ்த்தி விதவிதமான பரிசுகளை அளித்துக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் மித்ரபந்து என்ற செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவனும் இருந்தான். அவன் கைகளில் ராமனுக்கே அளவெடுத்துத் தைத்தது போன்ற அழகான இரு #பாதுகைகள் இருந்தன. வரிசையாக ஒவ்வொருவரும் தாங்கள் எடுத்து வந்த பரிசுப்பொருட்களைத் தந்துகொண்டிருந்தார்கள். அனைத்தையும் பார்த்த மித்ரபந்துவுக்கு வருத்தம் நேரிட்டது. எல்லோரும் விலை உயர்ந்த பரிசுகளைத் தரும்போது, தான் மட்டும் அற்ப #காலணிகளையா தருவது? என நினைத்தவன், ராமரைப் பார்க்கப் போகாமலே திரும்ப யத்தனித்தான். அதனை கவனித்துவிட்ட ராமபிரான், அவனை அருகே அழைத்தார். உண்மையான உழைப்பில் உருவான உன் பரிசு தான் இங்கே இருக்கும் அனைத்தையும் விட உயர்ந்தது. எனக்குப் பிரியமானதும் இதுவே! ராமர் சொல்ல, அவரது அன்பில் நெகிழ்ந்து போனான் மித்ரபந்து. ராமபிரான் வனவாசம் செல்லப் புறப்பட்டபோது, தாயே, வனவாசம் செல்லும்போது எதையுமே எடுத்துச் செல்வது கூடாது தான். இருப்பினும் இந்தப் பாதுகைகளை அணிந்து ச...

யாரையும் குறைவாக எண்ணாதீர்கள்

*யாரையும் குறைவாக எண்ணாதீர்கள்....* *ஒரு பிரபல விஞ்ஞானி காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது. ஆள் நடமாட்டமே இல்லை. பக்த்தில் கடைகளும் ஏதும் இல்லை* *தானே டயரைக் கழற்றி ஸ்டெப்னி மாற்ற ஆரம்பித்தார். அனைத்து போல்ட்டுக்களையும் கழற்றிவிட்டு ஸ்டெப்னி எடுக்கப் போகும் போது கால் தடுக்கிக் கீழே விழ கையில் இருந்த போல்ட்டுக்கள் அனைத்தும் உருண்டு போய் பக்கத்தில் இருந்த ஒரு குட்டையில் விழுந்தன* *என்ன செய்வது என்று யோசித்த போது கிழிந்த ஆடையுடன் ஒரு வழிப் போக்கன் அந்த வழியே வந்தான். அவரிடம் "ஐயா! என்ன ஆயிற்று?" என்று கேட்டான்.* *அந்த விஞ்ஞானி மனதில் இந்த அழுக்கடைந்த குட்டையில் இறங்க இவன் தான் சரியான ஆள் என்றெண்ணி அவனிடம் " இந்தக் குட்டையில் விழுந்த போல்ட்டுக்களை எடுத்து தாருங்கள். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்" என்றார்* *அதற்கு வழிப்போக்கன் "இதுதான் உங்கள் பிரச்னையா? அந்தக் குட்டையில் இறங்கி எடுத்துத்தர எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை* *ஆனால் அதைவிட சுலபமான வழி ஒன்று இருக்கிறது. மூன்று சக்கரங்களிலிருந்தும் ஒவ்வொரு போல்ட்டைக...

ஆண்குறி பெரிதாக

இன்று பல ஆண்களுக்கு உள்ள மனக்கவலை இல்லற வாழ்க்கை குறித்து தான். அதிலும் குறிப்பாக தனது ஆண்குறி சிறியதாக இருந்தால் துணையை திருப்தி செய்ய இயலாதா என்ற சந்தேகம் எழும். இனி அதை பற்றி கவலை வேண்டாம். எளிமையான பயிற்சிகள் மூலம் ஆண்குறியை பெரியதாக்கலாம். 1. முதல் பயிற்சி: உங்கள் கையை ஃபேஸ் புக் லைக் சிம்பல் போல பயன்படுத்தி உங்கள் ஆண்குறியைக் கொஞ்சம் இறுக்கமாக பிடிக்க வேண்டும். பின் மென்மையாக உருவிவிடுதல் போன்று செய்ய வேண்டும். வெவ்வேறு கோணங்களில் இவ்வாறு செய்து வர வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை இவ்வாறு செய்து வந்தால் ஆண்குறி பெரிதாக வாய்ப்பிருக்கிறது  2. இரண்டாவது பயிற்சி:  உங்களது கட்டை விரலை, ஆண்குறியின் கீழ் பாகத்தில் மென்மையாக அழுத்தி மசாஜ் போல செய்து வந்தால் ஆண்குறி பெரிதாகும். இது ஒரு சிறந்த பயிற்சி என்று கூறப்படுகிறது. 3. மூன்றாவது பயிற்சி:  உங்கள் ஆண்குறியை மென்மையாக பிடித்து கீழ் திசை நோக்கி இழுத்து மசாஜ் போல செய்வதனால் ஆண்குறி பெரிதாகுமாம். மிக அழுத்தமாக பிடித்து செய்துவிடாதீர்கள். 4. நான்காவது பயிற்சி:  துண்டை இதமான சுடுநீரில் நனைத்து, பிழிந்த பின் உங...

சூட்சும சக்திகள்

சூட்சும சக்திகளும் நமது உடலும்! 1. நமது மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா?      நாம் எதை நினைக்கிறோமோ அங்கு நமது மனம்  செல்கிறது; அதற்கு தூரம் தடை இல்லை. நாம் தீயவர்களை நினைக்கும்போது நமது சூட்சும சக்தி அவர்களுடன் இணைந்து நமது வலிமை குறைகிறது. இறைவனை எண்ணும்போது சூட்சும சக்தி வலிமை பெற்று நம்மை காக்கிறது. 2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது. 3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது. 4. ஒவ்வொரு மனிதனுக்கும் ‪சூ‎ட்சும‬ சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும். 5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது. 6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும். 7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது. 8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது. 9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது. 10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி. 11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல. அவனின் சூட்சு...

விஞ்ஞானதிற்கு விளங்காத மெஞ்ஞானம்

மெஞ்ஞானத்தை பற்றி விஞ்ஞானத்தால் விளங்கி கொள்ளவோ விளக்கவோ முடியாத இன்றைய சூழ்நிலையிலும், விஞ்ஞானதிற்கு விளங்காத விஷயங்களையும் மெஞ்ஞானம் விஞ்ஞானமுறையில் விளக்கி கொண்டுதான் உள்ளது. "அமானுஷ்ய இரகசியங்கள்" என்ற புத்தகம் குண்டலினி சக்தியை பற்றி விஞ்ஞானமுறையில் தெளிவாக விளக்கியுள்ளது. அப்புத்தகத்தின் ஒரு பகுதியை கொண்டே இப்பதிவின் ஓர் பகுதி விளக்கப்பட உள்ளது. பதிவுக்குள் நேரடியாக செல்வதற்கு மன்னிக்கவும். குண்டலினி சக்தி நம் முதுகுதண்டின் அடிப்பகுதியில் குடிகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அங்கே என்ன?? உள்ளது என்று பார்த்தால் தனிமங்களே!! அத்தனிமத்தின் பெயர் வெண்பாஸ்பரஸ். இந்த வெண்பாஸ்பரஸ் காற்று பட்டாலே பற்றி எரியும் தன்மை கொண்டது. அதேபோல் நம் உடலில் உண்ணாக்குக்கு மேலேயும் அடிவயிற்றுக்கு கீழேயும் காற்று செல்வதில்லை. இங்கே ஒரு சாதகன் எதோ ஒரு சாதகம் மூலம் சுழுமுனை வழியாக காற்றை மூலாதாரத்திற்கு கொண்டு செல்லும்போது, வெண்பாஸ்பரஸ் காற்றோடு வினைபுரிந்து எரிய தொடங்கி அந்த அனல் மேலே எழுகின்றது. இதுவே யோகமுறையில் குண்டலினி விழிப்படைதல் ஆகும். நம் உடலின் வெப்பத்த...

சித்தர் என்றால் என்ன

*சித்தர் என்றால் என்ன...!!!* **************************** சிலரை மட்டும் சித்தர் என்கிறார்கள்? இவர்கள் யாரை வழிபட்டார்கள்? இவர்கள் சிவனை வழிபட்டாரா அல்லது விஷ்னுவை வழிபட்டார்களா? இன்னும் பல கேள்விகள் பல பேரிடம்..?? *சித்தர் என்றால்  சித்தம்.. *சித்தம் என்றால் அறிவு.. *சித்தர்கள் என்றால் அறிவு தெளிந்தோர் என்று பொருள்.. *சித்தர்கள் யாரிடமும் அடிமையாகுவும் இல்லை..! *சித்தர்கள் யாரையும் அடிமையாகுவும் இல்லை..! *சித்தர்கள்  விதிமுறைகளுக்கு அப்பால் பட்டவர்கள்..! இவர்களுக்கு நேரம் கிடையாது .. தீட்டு கிடையாது. சாதிகள் கிடையாது. சமையங்கள்  கிடையாது .. *சித்தர்கள்  கோட்பாடு ஒன்று மட்டுமே..* இறைவன் ஒருவனே.. அவர் ஜோதி வடிவாக உள்ளவர்.. அவர் தன்னுள்ளே உள்ளே உள்ளார் என்பதை உணர்ந்தவர்கள்.. *அவரை அடையக்கூடிய வழி அன்பு மட்டுமே என உணர்ந்தவர்கள்..* சித்தர் என்ற வார்த்தை சித்தியில் இருந்து வந்தது. ஆன்மீகத்திலும்,அறிவியல் சாதனைகளிலும் முழுமை பெற்ற நிலை தான் சித்தி. சித்தி பெற்றவர் சித்தர்... “தத்துவங்கள் தொன்னுற்று ஆறும் தாண்டியவர்கள் சித்தர்” என்பார் #...

முருகனின் 16 வகையான அலங்காரங்கள்

முருகனின் 16 வகையான அலங்கார கோலங்கள் எவை.?* *01. ஞானசக்திதரா்* இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காாியங்கள் வெற்றியுடன் முடியும். *திருத்தணிகை*யில் எழுந்தருளியிருக்கும் மூலவாின் திருவடிவம் *ஞானசக்திதரா்* திருக்கோலமாகும். *02. கந்தசாமி* இவரை வழிபட்டால் சகல காாியங்களும் சித்தியாகும். *கந்தசாமி., பழனிமலை* ஆண்டவாின் திருவடிவம் ஆகும். *03. ஆறுமுக தேவசேனாபதி* இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். *சென்னிமலையாண்டவா்* திருக்கோயிலில் கா்ப்பக்கிரஹ மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது. *04. சுப்பிரமணியா்* இவா் தன்னை வழிபடும் பக்தா்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவா். நாகை மாவட்டத்திலுள்ள *திருவிடைகழி* முருகன் கோயில் மூலவா் *சுப்பிரமண்யா்* ஆவாா். *05. கஜவாகனா்* இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும். *திருமருகல்., மேல்பாடி*., மற்றும் *சிதம்பரம் நடராஜா் கோயில்* *_கோபுரம் மற்றும் சுதையாகவும்_* யானை மீதிருக்கும் இவரது திருவுருவம் உள்ளது. *06. சரவணபவா்* தன்னை வழிபடும் அடியவா்களுக்கு மங்களம்., ஒலி., கொடை., சாத்வீகம்., வீரம் முதலிய குணங்களை அளிப்பவா். *சென...

எவ்வளவு அழகு இந்த 26 வார்த்தைகள்

இந்த 26 வார்த்தைகள்! எவ்வளவு அழகு *A - Appreciation* மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள். *B - Behaviour* புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள். *C - Compromise* அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள். *D - Depression* மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள். *E - Ego* மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள். *F - Forgive* கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள். *G - Genuineness* எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள். *H - Honesty* தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள். *I - Inferiority Complex* எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள். *J - Jealousy* பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும். *K - Kindness* இனிய இதமான ...

வெற்றியின் படிக்கட்டுகள்

மன்னரின் அரசவை... ஒருவர் தான் ஆரம்பிக்க இருக்கும் கல்லூரிக்கு நிதி கேட்டு வருகிறார். அந்த மன்னர் இந்து என்றாலே கோபப் படுபவர். " நிதி தானே ..இந்தா என தன் காலில் இருந்த ஷூவை வந்தவர் மேல் வீசி எறிந்தார். எதிர்பாராத நிகழ்வால் நிலைகுலைந்தாலும்..ஒருபக்கம் அவமானம்..மனதை கஷ்டப்படுத்தியது. இருந்தாலும் ஒரு நல்ல விஷயத்துக்காகத் தானே அவமானப்படுகிறோம்..என தேற்றிக்கொன்டு..மன்னருக்கு நன்றி சொல்லி கிளம்பினார். மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை . என்னடா நாம் அவமானப்படுத்த ஷூவை வீசினோம்   நன்றி சொல்லி செல்கிறானே....என. ஒருவரைஎப்படிஅவமானப்படுத்த முயன்றாலும்..எதிரிலிருப்பவர் தன் நோக்கத்தில் உறுதியாய் இருந்தால் என்ன செய்ய முடியும்  மேலும் தன்மேல் நம்பிககையில்லாதவர்கள் தான்அவமானமாய் உணர்ந்து எமோஷன் ஆவார்கள். வெளியில் ஒரே சத்தம் ..அமைச்சரை அழைத்த மன்னர் என்னஅங்கே..என்றார் நீங்க எறிந்த ஷூவை ஏலம் போடுகிரான் மன்னா..கல்லூரி கட்ட மன்னர் தந்த ஷூ..என்றே கூவுகிரான்.என்றார் எவ்வளவு போகிறது... படு கேவலமாய் பத்து நாணயத்துக்கு மேல் ஏலம் போகவில்லை என்றார்.. அய்யய்யோ..என்ன விலைய...

இளமைக்கான மருந்து

இளமைக்கான மருந்து "வெந்நீர் + எலுமிச்சை + தேன்" தெய்வீக இயற்கை பானம் வாழ்நாள் முழுவதும், "நாளின் முதல் திரவ உணவாக" எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், "புற்று நோய்" என்ற, இந்த நூற்றாண்டில் மனித குலத்தை மிக பயப்படுத்தும் ஒரு வார்த்தை, அகராதியில் இருந்து நீக்கப்படும்! ஓவராக தெரிகிறதா? தொடர்ந்து படியுங்கள் உண்மை விளங்கும்! ஐந்து வருடங்களாக தொடர்ந்து நடத்தப்பட்டுவரும் எனது "ஒரு நாள் பயிற்சி வகுப்பில்"  கலந்து கொண்ட அனைத்து பயனாளிகளும்(சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள்) அடுத்த நாளிலிருந்து தொடர்ந்து தேன்,எலுமிச்சை பானத்தை "உணவாகவும், மருந்தாகவும்" பருகி வருவதோடு சர்க்கரை, இரத்த அழுத்தம், தைராய்டு, உடல் பருமன், கர்பப்பை கோளாறு, "மன அழுத்தம்", மற்றும் அனைத்து விதமான "உடல் மற்றும் மனம்சார்ந்த" நோய்களிலிருந்து பூரணகுணம் கண்டு மருந்து மாத்திரை இல்லா பெறுவாழ்வு வாழ்கிறார்கள் என்று சொன்னால் நம்புவது சற்று கடினம்தான்! இது பல ஆயிரம் ஆண்டுகளாக, உடல் செல்களின் தேவையை புரிந்து கொண்டு, உணவை தேடிப்பிடித்து சாப்பிட்டு, ந...

8 க்குள் ஒரு யோகா

*"...8 க்குள் ஒரு யோகா..."* (முழுவதும் படியுங்கள்) 🤝  *"எட்டு"* போடுகிறவனுக்கு *"நோய்"* எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி...! 🙌 மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும்.. 🤝 *உங்கள் வீட்டின் உள்ளோயோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து,*  6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் செவ்வக கோடு இட்டு  அதற்குள் 8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள்...! *"...இது தெற்கு வடக்காக நீளப் பகுதி இருக்கணும்..."* காலை அல்லது மாலை , வடக்கு நோக்கி நின்று அந்த *8* வடிவ கோட்டின் மேல் உங்கள் நடை பயிற்சியை ஆரம்பியுங்கள்...! 🤝 *ஆண்கள் வலது கை பக்கம் பெண்கள் இடது கை பக்கமும் நடக்க ஆரம்பிக்கணும்.* 🤝 ஆரம்பித்த இடத்திற்கே வந்த பின் அதே வழியில் தொடர்ந்து *21 நிமிடம்* நடக்கணும் . 🤝 பின்பு மறுமுனையில் தெற்கு நோக்கி நின்று  இதேபோல் *21 நிமிடம்* கையை நன்கு விசிறி மிதமான வேகத்தில் நடை பயிற்சி செய்யணும்,  *42 நிமிடம்*. 🤝 *1.* பயிற்சி தொடங்கிய அன்றமார்பு சளி கரைந்து வெளியேறுவதை காணலாம். *2.* இந்த பயிற்சியை இருவேளை செய்துவந்தால், உள்ளங்கை க...

நிலக்கடலை

*வேர்கடலை கொழுப்பு அல்ல...! பெண்களின் கர்ப்பபைக்கான மூலிகை…!!* நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம். நிலக்கடலையில் *போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம்.* எனவே *நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.* தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். *கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம்.* இல்லையேல் *கருவுற்ற பின்...

ராமபிரான் அன்பு

சீதையை மணம் செய்து கொண்டு அயோத்திக்குத் திரும்பினார் ராமபிரான். நாட்டு மக்கள் எல்லோரும் ராமபிரானை வாழ்த்தி விதவிதமான பரிசுகளை அளித்துக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் மித்ரபந்து என்ற செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவனும் இருந்தான். அவன் கைகளில் ராமனுக்கே அளவெடுத்துத் தைத்தது போன்ற அழகான இரு #பாதுகைகள் இருந்தன. வரிசையாக ஒவ்வொருவரும் தாங்கள் எடுத்து வந்த பரிசுப்பொருட்களைத் தந்துகொண்டிருந்தார்கள். அனைத்தையும் பார்த்த மித்ரபந்துவுக்கு வருத்தம் நேரிட்டது. எல்லோரும் விலை உயர்ந்த பரிசுகளைத் தரும்போது, தான் மட்டும் அற்ப #காலணிகளையா தருவது? என நினைத்தவன், ராமரைப் பார்க்கப் போகாமலே திரும்ப யத்தனித்தான். அதனை கவனித்துவிட்ட ராமபிரான், அவனை அருகே அழைத்தார். உண்மையான உழைப்பில் உருவான உன் பரிசு தான் இங்கே இருக்கும் அனைத்தையும் விட உயர்ந்தது. எனக்குப் பிரியமானதும் இதுவே! ராமர் சொல்ல, அவரது அன்பில் நெகிழ்ந்து போனான் மித்ரபந்து. ராமபிரான் வனவாசம் செல்லப் புறப்பட்டபோது, தாயே, வனவாசம் செல்லும்போது எதையுமே எடுத்துச் செல்வது கூடாது தான். இருப்பினும் இந்தப் பாதுகைகளை அணிந்து செல்...

கர்மா -- பழைய கணக்கு

இல்லற தர்மம். . கட்டிய மனைவியை கடைசி வரை கண் கலங்காமல் காப்பவன் தவம் செய்ய தேவை இல்லை இருபத்தி ஒரு வயது வரை அவனவன் சொந்த ஆன்ம கர்மா செயலுக்கு வராது அந்த ஆன்மாவின் ஸ்தூல தாய் தந்தை கர்மா வே வழி நடத்தும்  96 தத்துவங்கள் முடிவு பெறுவது இருபத்தி ஒரு வயதிலே அதன் பிறகே அவனது சொந்த ஆன்ம கர்மா செயலில் இறங்கும். சிவமாக இருந்தால் மட்டும் சிரசு ஏற முடியாது சக்தியோடு துணை சேர வேண்டும். சிரசு ஏற பல வழி தியானம் மூலம் பக்தி மூலம் ஞான மூலம் யோக மூலம் தீட்சை மூலம் சிவசக்தி மூலம் இன்னும் எத்தனையோ மூலம் வழி உள்ளது சிரசு ஏற. ஆனால் சிறந்த மூலம் இல்லற தர்மம். சிவம் பிறக்கையிலே அவனுக்கு முன்பே சக்தி பிறந்து விடுகிறது சக்தி மாறி சிவம் சேர்ந்தாலே பிறவியே சிக்கலே மனம் பொறுத்தம் பூமியிலே ஜெயிப்பது இல்லை ஆன்ம பொறுத்தமே பிறவியை ஜெயிக்கும். அந்த சக்தி யோடு சிவம் சேரும் போதே சர்வமும் சாந்தி ஆகும் சிவ சக்தி இடையே ஊடலும் கூடலூம் உற்சாகம் தானே......!!! ஆனால் சக்தியின் கண்ணீருக்கு சிவம் காரணமானால் அதை விட கொடிய கர்மா உலகில் இல்லை ஒருவன் வாழ்...

மணம் தளராதே ----- இது மனைவிகளுக்கான பதிவு

ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான்... இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான். அவனுக்கு அன்பும், அழகும் நிறைந்த மனைவி இருந்தாள். அவன் வாழ்க்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக் கொண்டிருந்தது. எல்லாக் கதைகளிலும் வழக்கமாக வருவது போல் நம்ம கொல்லன் வாழ்க்கையிலும் சோதனை காலம் வந்தது. நவநாகரீக காலத்தின் துவக்கமாய் இருந்த நேரம் அது. கொல்லப் பட்டறை தொழில் நலிவுற்றது. வருமானம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்து அன்றாட உணவுக்கே வறுமை என்ற நிலை வந்து விட்டது. கொல்லனுக்கோ ஊடலிலும், காதலிலும் கூட நாட்டம் இல்லாமல் விரக்தி மனதில் குடி கொண்டது. சோகமே உருவாகி விட்டான். ஒரு நாள் மாலை வேளையில் மனைவியின் மடியில் தலை சாய்த்து வானத்து நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தான். மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்து கண்ணீர் துளிகளாய் கரைந்தோடியது. அதைக் கண்ட மனைவி தழுதழுத்து ஆறுதலாய் பேசினாள். "ஐயா எஞ்சாமி எதுக்கு கலங்குறீங்க" இந்த தொழில் இல்லைன்னா என்ன, பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி அதை அக்கம் பக்கத்து கிராமத்துல...

ஆண்களின் முக அழகிற்கு சில

தினமும் இதை ஒரு முறை செய்தால் ஆணழகன் நீதான் ! பெண்களை போலவே ஆண்களுக்கும் சிவப்பாக, அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சொல்லப்போனால் பெண்களை விட ஆண்கள் தான் தங்களது முகத்திற்கு அதிக பாரமரிப்பு தர வேண்டியது அவசியமாகிறது. ஏனென்றால் அவர்கள் தான் மிக அதிக நேரம் வெயிலில் அலைகிறார்கள். அவர்களுக்கு தான் அதிகமாக வெயிலில் அலைவதால், முகம் கருமையாகின்றது. மேலும் தூசி புகைகள் போன்றவை தொடர்ந்து படுவதால் முகப்பருக்களும் வருகின்றன. ஆண்கள் அடிக்கடி முகத்தை கழுவ வேண்டியது அவசியமாகும். எண்ணெய் பசை சருமத்தை கொண்ட ஆண்கள் முகத்திற்கு சோப்பிற்கு பதிலாக பேஸ் வாஷை பயன்படுத்தலாம். முதலில் ஆண்கள் தங்களது முக அழகை பற்றி கவலைப்படாமல் இருந்தார்கள். ஆனால் இப்போது எல்லாம் பெண்களை விட ஆண்கள் தான் தங்களது அழகு விஷயத்தில் அதிகமாக கவனம் செலுத்துகின்றனர். இந்த பகுதியில் ஆண்களின் தோற்றத்தை மேம்படுத்தும் சில அழகுக்குறிப்புகளை காணலாம். சந்தனம் சுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி, இந்த கலவை காய்ந்ததும் முகத்தை கழுவலாம் . சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. இதனால் உங்களது முகம் பொல...

சக்கரை ஒரு நோயே அல்ல

சக்கரை ஒரு நோயே அல்ல! இன்றோடு பயம் போகட்டும் இதோ பூரணமாக கட்டுப்படுத்த வீட்டு வைத்தியம். இன்று பலரையும் தாக்கும் பொது நோயாக சர்க்கரை நோய் உருவேடுத்துக் கொண்டுள்ளது. டீக்கடையில் கூட நடுத்தர வயதினரை கண்டால், டீக்கடைக்காரர் சர்க்கரை கம்மியாக போடவேண்டுமா? என்ற கேள்வியை கேட்ட பிறகே டீ போடுகின்றார். அதற்கு காரணம் நடுத்தர வயதினர் அதிகமாக சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதே. ஏன் பிறந்த குழந்தைக்கே இந்நோய் உள்ளது. இது ஒரு பரம்பரை நோய் என்று தவறாக மக்கள் மத்தியில் பரப்படுகின்றது. நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் தாத்தா, பாட்டி சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார்களா? அல்லது உங்கள் பெற்றோரை கேளுங்கள் அவர்களுடைய தாத்தா, பாட்டி இந்நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தாருகளா? என்று இல்லை ஒரே பதில் மட்டுமே நமக்கு கிடைக்கப்பெறும். அப்படி இருந்தும் ஏன் இப்படி பரப்புகின்றார்கள் என்றால். இன்றைக்கு நாம், நாளை நம் பிள்ளைகள், அதன்பிறகு பேரப்பிள்ளைகள். பேரப்பிள்ளை காலங்களில் இது பரம்பரை நோய் என்றே நம்பப்படும். சர்க்கரை என்பது நோயா என்றால் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சித்த ம...

அன்பும் தன்னம்பிக்கையும்

ஆறு வயது சிறுவன் ஒருவன் தன் நான்கு வயது தங்கையை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான். ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மைகளை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து, "எந்த பொம்மை வேண்டும்?'' என்றான். அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் கடையின் முதலாளியை பார்த்து... ''அந்த பொம்மை என்ன விலை?'' என்று கேட்டான். அதற்கு சிரித்துக்கொண்டே அந்த முதலாளி, ''உன்னிடம் எவ்வளவு உள்ளது?'' என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன்.... தான் விளையாட, சேர்த்து வைத்து இருந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தான்! ''இது போதுமா...?" என்று கவலையுடன் கேட்டான். அதற்கு அந்த கடைக்காரர் அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே...., "எனக்கு நான்கு சிப்பிகள் போதும்!'' என்று மீதியை கொடுத்தார். சிறுவன், மகிழ்ச்சியோடும் மீதி உள்ள சிப்பிகளோடும்.... தன் தங்கையோடு அந்த பொம்மையை எடுத்துக்கொண்டு சென்றான். இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்த அந்த கடையின் வ...

பகவானும் பழைய சாதமும்

சிவாலயங்களில் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் செய்கிறார்கள். இதுபோல் பெருமாளையும் பழைய சாதத்துடன் ஒப்பிடுவார்கள். பழையது சாப்பிடும் பழக்கம் இப்போதும் சிலரிடம் இருக்கிறது. கிராமங்களுக்குப் போனால், முதல்நாள் மீந்துபோன சோறை, தண்ணீரில் போட்டு விடுவார்கள். காலையில் எழுந்ததும், சோறு ஊறிய நீரைக் குடிப்பார்கள். இதற்கு "நீராகாரம்' என்று பெயர். பின், பழைய சாதத்தை சாப்பிடுவார்கள். இது காலை வெயிலைத் தாங்கும் சக்தியைத் தரும். "பழையதும் பகவானும் ஒண்ணு' தான். எப்படி தெரியுமா? பழையதும் விடிய விடிய ஜலத்தில் கிடக்கிறது. நாராயணன் பாற்கடலிலேயே படுத்திருக்கிறார். பழையதை காலையில் சாப்பிட வேண்டும். பகவானையும் காலையில் வணங்க வேண்டும். பழையதைப் போல நாராயணனும் நாரம் (தண்ணீர்) சூழ இருக்கிறார். நாரம் சூழ உள்ளதால் தான் அவனை "நாராயணன்' என்கிறோம். நன்றி

வாழ்வில் செல்வ செல்வாக்கு பெற உதவும் குரு மந்திரம்

குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. நவகிரகங்களில் சுப கிரகமான குருவின் அருள் இருந்தால் ஒருவர் தன் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவது உறுதி என்றே கூறலாம். அதே போல ஒருவருக்கு குரு தோஷம் இருந்தால் திருமண தடை, குழந்தை பேரு அடைவதில் தடை என வாழ்வில் பல தடைகள் இருந்துகொண்டே இருக்கும். குரு தோஷம் உள்ளவர்கள் தடைகளை தகர்தெறியவும், தோஷம் இல்லாதவர்கள் வாழ்வில் மென்மேலும் உயரவும் உதவும் குருவின் மந்திரம் இதோ. ‘ஓம் குரு தேவாய வித்மஹே பிரம்மானந்தாய தீமஹி தந்நோ குரு பிரசோதயாத்’ தினம் தோறும் இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக வாழ்வில் பல சிறப்புகளை பெறலாம். குரு தோஷம் உடையவர்கள் இந்த மந்திரத்தை கூறுவதோடு நின்றுவிடாமல் வியாழ கிழமைகளில் விரதமிருந்து குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சார்த்தினால் நல்ல பலன் கிடைக்கும். நன்றி

இருப்பே இல்லாமல் வாழ முடியுமா ?

இந்த உலகத்தில் உள்ள அணைத்து நோய்களுக்கும் ஒரே மருந்து இருந்தால் எப்படி இருக்கும்?  இதை கேள்வியை உலகில் உள்ள நவீன விஞ்சானிகளிடமோ அல்லது மருத்துவரிடமோ கேட்டால்  இது முட்டாள்தனமான கேள்வி இது சாத்தியமே இல்லை என்பார்கள். ஆனால் இதே கேள்வியை தமிழனிடம் கேட்டால் சாத்தியம் என்பான். ஆம் இதைதான் பல ஆயிரம்வருடம் முன்பே 18 சித்தர்களில் ஒருவரான மாபெரும் தமிழ் சித்தர் போகர்க்கு தோன்றிய சிந்தணையில் உதித்த மருந்துதான்  நவபாஷாணம். இதற்காக அவர் மூலிகைகள் ஆராய்ச்சியில் இறங்கினார்  கிட்டத்தட்ட 4448 மூலிகைளை உபயோகித்து அதை 81 பாஷாணங்களாக மாற்றி இந்த பாஷாணங்களை 9 பாஷாணங்களாக பிரித்து எடுத்தார்.  அவை(கௌரிபாஷானம் , கெந்தகபாஷானம்,சீலைபாஷானம்,வீர ப்பாஷானம்,கச்சாலபாஷானம்,வெள்ளை பாஷானம் தொட்டிபாஷானம்,சூதப்பாஷானம்,சங்குபாஷானம் ஆகும்)இந்த 9 பாஷானங்களை 9 விதமான எரிபொருளை கொண்டு சூடு பண்ணி பூமியில் குழிதோண்டி இந்த 9 பாஷாணங்களை புதைத்து குறிப்பிட்ட நாளில் எடுத்து மருந்தாக மக்களுக்கு கொடுத்தார். இந்த நவபாஷாணம் உலகில் நிறைய இடங்களில் இருக்கு என்று கூறினாலும் நிருபிக்கபட்ட...

மரியாதை

*ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார்.* *ஒருநாள் ஏதோ வேலையாக நடந்துசென்றார்.* *அப்போது* *செருப்பு பிஞ்சுபோச்சு..* *அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார்.* *அந்த வீட்டுக்காரரை அழைத்து...* *ஐயா இந்தமாதிரி வரும்போது  என் செருப்பு பிஞ்சுபோச்சு.* *புதுசெருப்பு வேற.. அதனால இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப்போறேன்...* *காலையில என் வீட்டு வேலைக்காரனை  அனுப்பி எடுத்துக்கிறேன் என்றார்.* *அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும் என்றார்.* *அதற்கு அந்த வீட்டுக்காரர்* *அந்த செல்வந்தரைப் பார்த்து...* *ஐயா.. “ நீங்க எவ்வளவு பெரிய செல்வந்தர்..! எங்க வீட்டு வாசலில் உங்க செருப்பு கிடப்பது கூட எங்களுக்கு கௌரவம் தான்.* *நீங்க தாராளமாக வெச்சிட்டுப்போங்க“ என்று சொன்னார்.* *அதுக்கு பிறகு அவர் தன்னுடைய வேலைக்காரனை அனுப்பி செருப்பை பெற்று கொண்டார்* *சில ஆண்டுகள் கடந்தன...* *ஒருநாள் அந்த* *செல்வந்தரே இறந்து போனார்.*  *அவரின் இறுதி ஊர்வலம்  செருப்பு வைத்தாரே அந்த வீட்டு வழியே வந்தது.* *அப்போது நல்ல மழை.⛈* *பிணத்தைத் தூக்கி வந்தவ...

கல்கி அவதாரம்

கல்கி அவதாரம் எப்பொழுது எங்கு எதற்காக நிகழும்..? கலியுக முடிவில் உலகம் அழியுமா..? 'கல்கி அவதாரம்' குறித்து தவறான கருத்துகள் பலவும் நிலவி வருகிறது. புராணங்களின் துணை கொண்டு அவதார உண்மைகளை உணர்ந்து தெளிவு பெறுவோம். கலியுக முடிவிலேயே 'கல்கி அவதாரம்' நிகழும் என்று புராணங்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன. கலியுகம் 4,32,000 ஆண்டுகளைக் கொண்டது. தற்பொழுது 5,105 ஆண்டுகளே முடிவடைந்து உள்ளது. யுகம் நிறைவு பெற சுமார் 4,27,000 ஆண்டுகள் மீதமுள்ளது. 'சம்பளம்' என்னும் கிராமத்தில் 'விஷ்ணு யசஸூ' என்ற வேதியருடைய இல்லத்தில் பாற்கடல் வாசனான பரந்தாமன் கோடி சூர்ய பிரகாசமாய் கல்கி அவதாரம் எடுத்து அருளுவார் (ஆதாரம்: ஸ்ரீவிஷ்ணு புராணம்). ஸ்ரீகல்கி, தர்மத்துக்கு விரோதமாக செயல்படும் அனைவரையும் சம்ஹரித்து, உலகம் முழுவதும் வேத தர்மத்தை நிலை பெறச் செய்தருளுவார். தர்மத்தை நிலை நிறுத்துவதே இறை அவதாரங்களின் நோக்கமே அன்றி, புவியை அழிப்பது அல்ல. பிரளயம் கல்பத்தின் முடிவில் மட்டுமே நிகழும். ஒரு கல்பம் 14 மன்வந்திரங்களைக் கொண்டது. ஒரு மன்வந்திரம் 71 சதுர்யுகங்களைக்...

வாழ்க்கை தத்துவம் --- "அழுகண்ணிச் சித்தர் "

மிகவும்_அழகாக_வாழ்க்கையின்_ தத்துவத்தை_கூறியுள்ளார். "அழுகண்ணிச் சித்தரின் “ஊத்தைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி மாற்றிப்பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை மாற்றிப்பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால் ஊத்தைச் சடலம் விட்டே - என் கண்ணம்மா உன் பாதம் சேரேனே..?!" விளக்கம்: இந்த உடம்பு நாற்றம் பிடித்த அழுக்கு உடம்பு. உப்பிருந்த மட்பாண்டம் போல அளறு பிடித்துக் கரைந்து அழிந்து போகும் உடம்பு. இந்த உடம்பின் இயல்பை மாற்றி அழியாத உடம்புடன் பிறப்பதற்கான மருந்து எனக்குக் கிடைக்கவில்லை. அப்படி அழியா உடம்புடன் பிறப்பதற்கு எனக்கு மட்டும் மருந்து கிடைக்குமென்றால் இந்த அழியக்கூடிய ஊத்தைச் சடலத்தை விட்டொழித்து உன் பாதமே தஞ்சம் என்று வந்து விடுவேனே என்று குறிப்பிடுகின்றார். நாகப்பட்டினத்திலே சமாதி அடைந்ததாகச் சொல்லப்படும் "அழுகண்ணிச் சித்தரின்" பெயர் ஏற்பட்டடதிற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. இவரது பாடல்களிலுள்ள அர்த்தங்கள் எமது மனங்களின் சிந்தனைச் சக்கரத்தைச் சுழற்றி வாழ்க்கையின் உண்மைநிலையை சிந்திக்கப் பண்ணுகிறது. இவரது பாடல்கள் ஒப்பாரி முறையில் இருந்தாலும் அப்பாடல்க...

திருச்செந்தூரின் கடலோரத்தில் --- அழகிய வரிகள்

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்! தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்! அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம்! ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும் அன்பர் திருநாள் காணுமிடம்! கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா! குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா! மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று! வாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று! சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும் முகம் ஒன்று! சாதிமத பேதமின்றிப் பார்க்கும் முகம் ஒன்று! நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ண முகம் ஒன்று! நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு! பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா! கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா! நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால் கந்தா!! முருகா!! வருவாய் அருள்வாய் முருகா!! நன்றி

"ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே"

"ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே" என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள் இதோ அதற்கு ஓர் உதாரணம்: அந்த நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான். ஒரு அமைச்சருக்குச் சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான். மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன. அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன். ""ஐயோ நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று சிந்து பாடினார்கள் அதிகாரிகள். "செய்யும் ஊழலை மிகவும் திறமையாகச் செய்திருக்கிறார்கள். இந்த மூவருமே ஊழல் பெருச்சாளிகளா அல்லது விதிவிலக்குகள் ஏதாவது இருக்கிறதா என்பதை அறிய வேண்டும்,'' என்று நினைத்தான் மன்னன். அவர்களை அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான். இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் மீண்டும் அழைக்கப்பட்டார்கள். ""மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்கு களப்பயிற்சி தரப் போகிறேன். உங்களிடம் ஒரு பெரிய சாக்கு தரப்படும். அதை எடுத்துக்க...

விக்கிரமாதித்தன் கதைகள் --- சேனாதிபதி

     தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான்.        பின்னர் கீழேஇறங்கி, அவன் அதைத் தூக்கிக்கொண்டு செல்லும் போது, அதனுள்ளிருந்த வேதாளம், “மன்னா! எந்த இலட்சியத்தை நாடி, இவ்வாறு நடு இரவில் மயானத்தில் என்னை சுமந்து கொண்டு திரிகிறாய் என்பது எனக்குத் தெரியவில்லை. சில சமயங்களில் அறிவில் சிறந்தவர்கள் என்று நாம் கருதும் சிலரது ஆலோசனைகள் நம்மைத் தவறான பாதையில் அழைத்துச் செல்லக் கூடும்! அவ்வாறு, அறிவிற்சிறந்தவர் என்று தான் கருதிய மந்திரியின் சொல் கேட்டு, தவறிழைத்த மன்னன் ஒருவனது கதையை உனக்குக் கூறகிறேன்!” என்று சொல்லிவிட்டு, தன் கதையைத் தொடங்கியது.        மகிபாலன் என்ற மன்னன் தனது முதல் மந்திரியான தர்மசீலரின் ஆலோசனைப்படி ஆட்சி செலுத்தி வந்தான்.          ஒரு சமயம், அவனுடைய சேனாதிபதி திடீரென இறந்து போக, புதிய சேனாதிபதியை நயமிக்கும் பொறுப்பை மகிபாலன் தர்மசீலரிடம் ஒப்படைத்தான். உடனே தர்மசீலரும் நாடெங்கிலும் உள்ள பல வீர இளைஞர்களைத் ...