விஞ்ஞானதிற்கு விளங்காத மெஞ்ஞானம்
மெஞ்ஞானத்தை பற்றி விஞ்ஞானத்தால் விளங்கி கொள்ளவோ விளக்கவோ முடியாத இன்றைய சூழ்நிலையிலும்,
விஞ்ஞானதிற்கு விளங்காத விஷயங்களையும் மெஞ்ஞானம் விஞ்ஞானமுறையில் விளக்கி கொண்டுதான் உள்ளது.
"அமானுஷ்ய இரகசியங்கள்" என்ற புத்தகம் குண்டலினி சக்தியை பற்றி விஞ்ஞானமுறையில் தெளிவாக விளக்கியுள்ளது.
அப்புத்தகத்தின் ஒரு பகுதியை கொண்டே இப்பதிவின் ஓர் பகுதி விளக்கப்பட உள்ளது.
பதிவுக்குள் நேரடியாக செல்வதற்கு மன்னிக்கவும்.
குண்டலினி சக்தி நம் முதுகுதண்டின் அடிப்பகுதியில் குடிகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஆனால் அங்கே என்ன??
உள்ளது என்று பார்த்தால் தனிமங்களே!!
அத்தனிமத்தின் பெயர் வெண்பாஸ்பரஸ்.
இந்த வெண்பாஸ்பரஸ் காற்று பட்டாலே பற்றி எரியும் தன்மை கொண்டது.
அதேபோல் நம் உடலில் உண்ணாக்குக்கு மேலேயும் அடிவயிற்றுக்கு கீழேயும் காற்று செல்வதில்லை.
இங்கே ஒரு சாதகன் எதோ ஒரு சாதகம் மூலம் சுழுமுனை வழியாக காற்றை மூலாதாரத்திற்கு கொண்டு செல்லும்போது, வெண்பாஸ்பரஸ் காற்றோடு வினைபுரிந்து எரிய தொடங்கி அந்த அனல் மேலே எழுகின்றது.
இதுவே யோகமுறையில் குண்டலினி விழிப்படைதல் ஆகும்.
நம் உடலின் வெப்பத்தை உண்மையில் மூலத்தில்தான் கண்டறிய முடியும் என்பதை கண்டோம்.
அந்த வெப்பத்துடன் இந்த அனலும் சேர்ந்தே மேலே எழுகின்றது.
அடுத்து அந்த அனல் மேலே எழும்பி சுவாதிஷ்தானத்தை அடைகின்றது.
அங்கே உள்ள தனிமத்தின் பெயர் கார்பன்.
மேலே எழும்பிய அனலுடன் கார்பன் அணுக்களும் வினைபுரிந்து வெப்பம் அதிகப்படுத்தப்படுகின்றது.
வெப்பம் அதிகப்படுத்தலே குண்டலினி எழுவதாக குறிப்பிடபடுகின்றது.
இதனால் அனல் மேலும் மேலே எழுந்து மணிபூரகத்தை அடைகின்றது.
அங்கே அது வினைபுரியும் தனிமத்தின் பெயர் ஹைட்ரஜன்.
இந்த தனிமத்தின் இயற்கை குணமே வெடிப்பதாகும்.
எனவே வெப்பநிலை மேலும் அதிகரித்து அனாகதத்தை அடைகின்றது.
அனாகதத்தில் உள்ள தனிமத்தின் பெயர் சுத்த ஆக்சிஜன்.
நாம் சுவாசிக்கும் காற்று நைட்ரஜன் கலந்த ஆக்சிஜனாகும்.
சுத்த ஆக்சிஜன் எப்பொருளையும் விரைவாக எரித்துவிடும்.
எனவே இங்கேயும் வெப்பம் அதிகரித்து விசுத்தியை அடைகின்றது.
ஐயோடின் என்பது விசுத்தியில் உள்ள தனிமத்தின் பெயராகும்.
இங்கேயும் வினைபுரிதலும் வெப்பம் அதிகமடைதலும் நிகழ்ந்து மேலேறுகின்றது.
அடுத்ததாக உள்ள சக்கரத்தின் பெயர் ஆக்கினை.
அங்கே சுத்த நைட்ரஜன் என்ற தனிமம் உள்ளது.
மேலே எழுப்பிய அனல் இத்துடன் வினைபுரிவதோடு அந்த புத்தகத்தில் முடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எழும்பிய குண்டலினி சகஸ்ரத்திற்கு சென்றபின்புதான் புருவமத்தி பூட்டு திறந்து கீழிறங்கி ஆக்கினையை அடையும்.
அப்படி பூட்டு திறந்து அங்கே பார்த்தால் சுத்த கந்தகம் இருக்கும்.
இது எப்படி உண்மை?? என்ற கேள்வி வரலாம்!!
அதனால் தான் முந்தைய பதிவில் சக்கரங்கள் என்று குறிப்பிட்ட இடங்களில் எண்ணென்ன சுரப்பிகள் உள்ளன என்பதை விவரிக்கப்பட்டது.
அந்த சுரப்பிகளையும் அதன் இயக்கத்தில் சுரக்கப்படும் வேதிபொருட்களையும் ஆராய்ந்தால் மேற்கண்ட தனிமங்களே இருக்கும்.
முடிந்தால் அந்த புத்தகத்தை வாங்கி ஒருமுறையாவது படிக்கவும்.
ஆன்மீக சம்பந்தமான உங்கள் பார்வை சிலமணி நேரம் விஞ்ஞானத்திற்குள்ளும் சென்று வரும் என்பது உறுதி.
சித்தர்களை ஏன்?? விஞ்ஞானிகள் என்று அழைத்தனர் என்பதும் புரியும்!!
இந்த மூலஅனல் எழுவதற்கு எந்த யோகம் சிறந்தது??
இதற்கு குரு அவசியமா??
இதில் ஆபத்து எதாவது உள்ளதா??
என்ற கேள்விகள் வரலாம்!!
உண்மையில் இந்த மூலஅனல் எழுவதற்கு எந்த ஒரு யோகமும் தேவையே இல்லை!!
என்பது அனுபவஸ்தர்கள் வாக்கு!!
உண்மையான தேடுதல் உள்ளவனுக்கோ அல்லது பக்குவிக்கோ அவர்களை அறியாமலே குண்டலினி விழிப்படைந்து எழுந்துவிடுகின்றது.
எப்படி?? என்றால் இதற்கு முந்தைய பதிவுகளில் இவைகளை பற்றி தெளிவாக விளக்கப்பட்டுள்ளது!!
குண்டலினி எழுப்புவது மிகவும் ஆபத்தான ஒன்று என்று பலர் கூறுவது உண்டு.
அவர்கள் காட்டும் உதாரணம் கூட தவறான முறைகள் அல்லது சித்து அல்லது சக்திகள் பெற அலைந்த சுயநலக்காரர்களின் முடிவை தானே தவிர, உண்மையான தேடுதல் அல்லது பக்குவியை அவர்கள் பார்த்ததில்லை என்பது தான் உண்மை.
இயற்கையும் இறைவனும் எந்த ஒரு காலத்திலும் யாருக்கும் தீங்கு நினைப்பதே இல்லை.
அப்படி தேடுதல் உள்ளவர்களுக்கே அவர்களை அறியாமல் எழுந்துவிடுகின்றது என்றால்,
இவர்களுக்கு மட்டும் எப்படி?? அது தெரியும்.
ஆன்மீகத்தில் குரு என்பவர் ஒரு விளக்கை ஏற்ற உதவும் தீக்குச்சியை போன்றவர்.
விளக்கை ஏற்றும் வரைக்கும் தான் அவருக்கு வேலை.
ஆனால் அப்படிபட்டவர் உங்களை தேடி அவரே தான் வருவாரே தவிர, நம்மால் அவர்களுக்கு ஆவதற்கு ஒன்றுமில்லை.
ஒரு சிலருக்கு எழவைத்து பின் இறக்கி புருவபூட்டை திறந்தும், இயற்கையாகவே எழுந்த ஒரு சிலருக்கு இறக்கி புருவபூட்டை திறந்து வைப்பதும் இவர்களே!!
அப்படி செய்வதும் கூட அவர்களுக்கு தெரிந்துதான் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.
அதுவும் தெரியாமலே நடந்துவிடும்.
தன்னை வெளிக்காட்டி கொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை.
ஏதாவது எதிர்பார்ப்பு இருந்தால் தானே, வெளி காட்ட வேண்டும்.
மொத்தத்தில் குரு என்பவர் அவசியம்.
ஆனால் அவர் வெளி தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை.
அனைத்தும் ஒரு சில நொடிகளிலேயே நடந்து முடிந்துவிடலாம்.
ஒரு குருவின் பெருமைகளை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
அவருக்கு நிகர் இந்த பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை.
அது உங்கள் அனுபவத்திற்கு வரும்போது நன்கு விளங்கும்.
"சிரம் முட்டும் பொழுதில்
வரம் தட்டும் குருவே
தரம் பார்த் துன்னை
பரம் ஆக்கிடு வான்"
ஆக்ஞா சக்கரத்தின் புருவமத்தி வாசல் திறந்தலே வெற்றிட பூஜ்ஜிய பரமநிலையாகும்.
பிரமநிலைக்கு மணிபூரக சக்கரம் விழிப்படைதலே காரணம்.
பக்தி நிலைக்கு அனாகத சக்கரம் விழிப்படைதலும், முக்தி நிலைக்கு சகஸ்ராரம் விழிப்படைதலும், யோக நிலைக்கு சுவாதிஷ்டானமும், ஞானத்தேடலுக்கு மூலாதாரம் விழிப்படைதலும் காரணமாகும்.
நாதத்தின் மீயோலி வெம்மையால் அமிர்தம் சுரப்பதற்கு விசுத்தி விழிப்படைதலே காரணமாகும்.
மேலும் நாம் தியானத்தில் அமரும் போது குண்டலினியானது புருவமத்தி அல்லது சகஸ்ராரத்திலும், தூங்கும் போது விசுத்தியிலும் தங்கும்.
அந்த அமிர்தமும் விசுத்தியை தாண்டி கீழிறங்காது.
அதாவது விசுத்திதான் உறைவிடம்(உறையும் இடம்).
குண்டலினி எழும்பியபின் முதலில் நரம்பு முடிச்சுகள் அவிழ்ந்து ஒவ்வொரு சக்கரமாய் விழிப்படையும்.
இதில் உடலில் மாறுபாடாக அடையாளமாக காண்பது விந்தின் வெம்மையால் சகஸ்ராரத்தின் கீழ் உள்ள மூளையின் நரம்பு முடிச்சுகள் அவிழ்ந்து வெம்மையானது நெருப்பாறாக மாறி வரிவரியாக தடம் இருக்கும்.
மேலும் உடலில் நிரந்தரமாக காணப்படும் அடையாளமாக புருவமத்திக்கு மேல் நெற்றி வகிடுக்கு கீழ் விந்தின் வெம்மையால் ஒரு பிறைவடிவ "U" நாமத்தடம் விழும்.
இத்தடமானது இப்பூமியில் உடல் விடும் வரை இருக்கும்.
கை விரலால் தடவி பார்த்து நெற்றியில் இந்நாமத் தடத்தினையும், கபாலத்தில் வரிவரியாக நெருப்பாற்றின் தடத்தினையும் காணலாம்.
சகஸ்ராரத்திலிருந்து நெருப்பாற்று தடத்தின் வழியாக அமிர்தமானது பிறை வடிவ நாமத்தடம் நீர் வடியும் விளிம்பாக மாறி அதன் வழி புருவமத்தி உட்வாசலான குதம் சென்று பின் அங்கிருந்தே உண்ணாக்கு வழி விசுத்தி சென்று உறைவிடமாய் கொள்கிறது.
மேலும் பொன்னை உரசினாற் போல் மேனியுடைய தேமலானது உடலில் அதிகம் காணலாம்.
அடுத்ததாக இந்திரியம், இரத்தம் வழியாக உடல் முழுவதும் கலந்ததன் அடையாளமாகிய உடலில் நறுமணமும், சிறுநீர் மற்றும் வியர்வையில் கூட இந்திரியத்தின் மணமோடு கூடிய ஓர் பழ வாசனையை அறியலாம்.
உடல் அடையாளமாக சாதாரணமாகவே உழிழ்நீரானது அதிகமாக சுரப்பதும் மற்றும் புருவமத்தி உள் வாசலான குதம் உறுத்தலும்,
மேலும் விசுத்தி சக்கரம்தான் அமிர்தமானது உறையும் இடமாதலால் தொண்டை மத்தியில் ஏதோ ஒன்று கட்டியாக ஒரு சிறு உருண்டையாக இருந்துகொண்டு எதையும் நாம் சாதாரணமாக விழுங்கும் போது அங்கு உறுத்தல் ஏற்படும்.
மற்றபடி காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை இருக்கும் இடத்திற்கு சற்று மேலே ஊர்க்குருவிகள் தட்டுப்படும்.
மாலை 6 மணி தாண்டி காலை 6 மணி வரை அமிர்தத்தின் மீயொலி நாதத்தின் ஈர்ப்பால் இருக்கும் இடம் மற்றும் செல்லும் இடம் எல்லாம் வௌவால்கள் கண்ணில் தட்டுப்படும்.
நன்றி
Comments
Post a Comment