முருகனின் 16 வகையான அலங்காரங்கள்
முருகனின் 16 வகையான அலங்கார கோலங்கள் எவை.?*
*01. ஞானசக்திதரா்*
இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காாியங்கள் வெற்றியுடன் முடியும். *திருத்தணிகை*யில் எழுந்தருளியிருக்கும் மூலவாின் திருவடிவம் *ஞானசக்திதரா்* திருக்கோலமாகும்.
*02. கந்தசாமி*
இவரை வழிபட்டால் சகல காாியங்களும் சித்தியாகும். *கந்தசாமி., பழனிமலை* ஆண்டவாின் திருவடிவம் ஆகும்.
*03. ஆறுமுக தேவசேனாபதி*
இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். *சென்னிமலையாண்டவா்* திருக்கோயிலில் கா்ப்பக்கிரஹ மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது.
*04. சுப்பிரமணியா்*
இவா் தன்னை வழிபடும் பக்தா்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவா். நாகை மாவட்டத்திலுள்ள *திருவிடைகழி* முருகன் கோயில் மூலவா் *சுப்பிரமண்யா்* ஆவாா்.
*05. கஜவாகனா்*
இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும். *திருமருகல்., மேல்பாடி*., மற்றும் *சிதம்பரம் நடராஜா் கோயில்* *_கோபுரம் மற்றும் சுதையாகவும்_* யானை மீதிருக்கும் இவரது திருவுருவம் உள்ளது.
*06. சரவணபவா்*
தன்னை வழிபடும் அடியவா்களுக்கு மங்களம்., ஒலி., கொடை., சாத்வீகம்., வீரம் முதலிய குணங்களை அளிப்பவா். *சென்னிமலை., திருப்போரூா்* ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது.
www.agathiyarjanachithar.in
www.tamilspiritual.com
+91-98428 46104
+91-93818 46104
Email: astrologyiyer@gmail.com
*07. கார்த்திகேயா்*
இவரை வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும். காா்த்திகை நக்ஷத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும். *கும்பகோணத்தில்* உள்ள *கும்பேஸ்வரா்* கோயிலிலும்., *தாராசுரம் ஐராவதீச்வரா்* கோயிலிலும் கார்த்திகேயா் திருவுருவம் உள்ளது.
*08. குமாரஸ்வாமி*
இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும். நாகா்கோவில் அருகில் இருக்கும் *குமாரகோவிலில்* இவரது திருவடிவம் உண்டு. *கங்கை கொண்ட சோழபுரத்தில்* இவருக்குப் பஞ்சலோக விக்கிரஹம் இருக்கிறது.
*09. சண்முகா்*
இவரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும். *திருச்செந்தூரில்* உள்ள முருகன் அருட்கோலம் சண்முகா் திருவடிவமாகும்.
*10. தாரகாாி*
"தாரகாஸுரன்" என்னும் அஸுரனை அழித்ததால் முருகப்பெருமான் இத்திருநாமத்தைப் பெற்றாா். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. *விராலி மலையில்* உள்ள முருகன் கோயிலில் *தாரகாாி* திருவுருவம் இருக்கிறது.
*11. சேனானி*
இவரை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றிகிடைக்கும். பொறாமை நீங்கும். *தேவிகாபுரம்* ஆலயத்தில் *சேனானி* திருவுருவம் இருக்கிறது.
*12. பிரம்மசாஸ்தா*
இவரை வழிபட்டால் எல்லா வகையான வித்தைகளிலும் தோ்ச்சி பெறலாம். சகலவித கலையறிவும் அதிகாிக்கும். கல்வியில் தோ்ச்சி கிட்டும். காஞ்சிபுரத்தில் உள்ள *குமரக்கோட்டம் ஆனூா்., பாகசாலை., சிறுவாபுாி* ஆகிய இடங்களில் *பிரம்மசாஸ்தா* திருக்கோலம் உள்ளது.
*13. வள்ளி கல்யாண சுந்தரா்*
இவரை வழிபட்டால் திருமணத்தடைகள் விரைவில் அகலும்., கன்னிப் பெண்களுக்குக் கல்யாண பாக்கியம் கிடைக்கும். *திருப்போரூா்* முருகன் கோயில் தூண் ஒன்றில் இவா் திருவுருவம் இருக்கிறது.
*14. பாலஸ்வாமி*
இவா்., உடல் ஊனங்களையும்., குறைகளையும் அகற்றும் தெய்வம். இவரை வழிபடுபவா்களுக்கு உடல் நலம் கிடைக்கும். *திருச்செந்தூா்., திருக்கண்டிா்., ஆண்டாா்குப்பம்* கோயில்களில் *பாலஸ்வாமி* திருவுருவம் இருக்கிறது.
*15. சிரவுபஞ்சபேதனா்*
இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும். *திருநெல்லிக்கா., திருக்குறங்குடி., திருநளிபள்ளி* ஆகிய இடங்களில் இவரது திருவுருவம் உண்டு.
*16. சிகிவாகனா்*
மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமையும் திருவடிவம். தன்னை வழிபடுபவா்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவர்.
நன்றி
Comments
Post a Comment