Posts

Showing posts from March, 2018

கடவுள் கணக்கு

ஒரு கோவில் மண்டப வாசலில் இரண்டு வழிப்போகர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர். இரவு நேரம். பெருத்த மழை வேறு. அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார். அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள். சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர். முன்னவர் இருவரில் ஒருவர் சொன்னார். என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார். இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர் ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள் இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்? என்றார். மூன்றாம் நபர் இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன்.( தேவை உள்ளவன்தான் தீர்வு சொல்வான்!) நீங்கள் உங்கள் ரொட்டிகளை ,ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். இப்ப்பொது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்! நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார். இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர். ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள். பொழுது விடிந்தது.மழையும் நின்றது. மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது...

உணவுகளை இந்த நேரத்தில் சாப்பிட்டால் ஆபத்து

👉 நீண்ட நாட்கள் நோய் இல்லாமல் வாழ வேண்டும் என்றால், அதற்கு ஆரோக்கியமான உணவுமுறை அவசியம். அவ்வாறு நாம் உட்கொள்ளும் உணவுகள் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். அப்படி இல்லையென்றால் தேவையற்ற உடல் பிரச்சனைகள் ஏற்படும். 👉 இங்கு எந்த உணவுகளை எப்போது சாப்பிட வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். வாழைப்பழம் : 👉 வாழைப்பழம், நமது ஜீரண சக்தியை அதிகரிப்பது முதல் வயிற்று பிரச்சனைகளில் இருந்து நம்மைப் பாதுகாப்பது வரை பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. 👉 வாழைப்பழத்தில் அதிக பொட்டாசியமும், நார்சத்தும் நிறைந்துள்ளது. பலரும் வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை காலை உணவாகவே உட்கொள்கின்றனர். இது தவறானது. 👉 வாழைப்பழம் அமிலத்தன்மை கொண்டது. இதை வெறும் வயிற்றில் உட்கொண்டால் குடல் பிரச்சனைகளை உண்டாக்கும். அதேபோல் வாழைப்பழத்தில் சர்க்கரை அளவும் அதிகமாக இருப்பதால் சில மணி நேரத்திலேயே உங்கள் உடலின் எனர்ஜி குறைந்து உங்களுக்கு சோர்வான உணர்வைத் தரும். 👉 குடல் புண், அல்சர் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிருங்கள். தயிர் : 👉 தயிர் ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் கூ...

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - முதல் அதிகாரம்

திருக்குறள் கடவுள்  வாழ்த்து - முதல் அதிகாரம்  1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி      பகவன் முதற்றே உலகு. உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.  2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்  நற்றாள் தொழாஅர் எனின். உரை: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.  3.மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்  நிலமிசை நீடுவாழ் வார். உரை: அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.  4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு  யாண்டும் இடும்பை இல. உரை: விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.  5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்  பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. உரை: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்து...