Posts

திருப்பதி திருமலைக்கு ஏன் செல்லவேண்டும்"?

திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா கிடைக்காதா? விஞ்ஞான பூர்வமான ஆதாரத்துடனான பதிவு யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும் எந்த ராசி காரர்களுக்கு நன்மை செய்யும் என்பதை இந்தப்பதிவில் தெளிவாக பார்க்கலாம்  வாருங்கள்... இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம்  நிம்மதி உண்டாகிறது. திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளதால் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் . கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும். பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது , இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது. வாஸ்துப்படி  வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன. வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் ...

சிவபுராணம் பாடல் வரிகள்

சிவபுராணம் பாடல் வரிகள் 1. சிவபுராணம் (திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்) தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே – எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன் திருச்சிற்றம்பலம் “நலம் தரும் சிவபுராணம் நாளும் பாடிடு மனமே சிவன் வருவான் அருள் தருவான் வாழ்வில் அனுதினமே ” நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க — 5 வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க — 10 ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி — 15 ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி சிவன் அ...

கருடபுராணம்_சொல்லும்_நன்மைகள்

கருடபுராணம்_சொல்லும்_நன்மைகள் 1 அன்னதானம் செய்தல் விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார். 2 கோ தானம் செய்தல் கோலோகத்தில் வாழ்வர் 3 பசு கன்றீனும் சமயம் தானம் கொடுத்தவருக்கு கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு 4 குடை தானம் செய்தவர் 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார் 5 தாமிரம,; நெய், கட்டில,; மெத்தை, ஜமுக்காளம், பாய,; தலையனை இதில் எதை தானம் செய்தாலும் சந்திலலோகத்து சுகங்களை அனுபவிப்பார் 6 வஸ்திர தானம் கொடுத்தவருக்கு 10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார் 7 இரத்தம,; கண,; உடல் தானம் கொடுத்தவருக்கு அக்கினிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார் 8 ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவருக்கு இந்திரனுக்கு சமமான ஆசனத்;தில் அமர்ந்திருப்பார் 9 குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவருக்கு 14 இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார் 10 நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பவர் ஒரு மன் வந்தரகாலம் வாயுலோகத்தில் வாழ்வார் 11 தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவருக்கு மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும் தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வர் 12 பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம் உன...

கடவுள் கணக்கு

ஒரு கோவில் மண்டப வாசலில் இரண்டு வழிப்போகர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர். இரவு நேரம். பெருத்த மழை வேறு. அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார். அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள். சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர். முன்னவர் இருவரில் ஒருவர் சொன்னார். என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார். இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர் ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள் இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்? என்றார். மூன்றாம் நபர் இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன்.( தேவை உள்ளவன்தான் தீர்வு சொல்வான்!) நீங்கள் உங்கள் ரொட்டிகளை ,ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். இப்ப்பொது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்! நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார். இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர். ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள். பொழுது விடிந்தது.மழையும் நின்றது. மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது...

உணவுகளை இந்த நேரத்தில் சாப்பிட்டால் ஆபத்து

👉 நீண்ட நாட்கள் நோய் இல்லாமல் வாழ வேண்டும் என்றால், அதற்கு ஆரோக்கியமான உணவுமுறை அவசியம். அவ்வாறு நாம் உட்கொள்ளும் உணவுகள் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். அப்படி இல்லையென்றால் தேவையற்ற உடல் பிரச்சனைகள் ஏற்படும். 👉 இங்கு எந்த உணவுகளை எப்போது சாப்பிட வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். வாழைப்பழம் : 👉 வாழைப்பழம், நமது ஜீரண சக்தியை அதிகரிப்பது முதல் வயிற்று பிரச்சனைகளில் இருந்து நம்மைப் பாதுகாப்பது வரை பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. 👉 வாழைப்பழத்தில் அதிக பொட்டாசியமும், நார்சத்தும் நிறைந்துள்ளது. பலரும் வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை காலை உணவாகவே உட்கொள்கின்றனர். இது தவறானது. 👉 வாழைப்பழம் அமிலத்தன்மை கொண்டது. இதை வெறும் வயிற்றில் உட்கொண்டால் குடல் பிரச்சனைகளை உண்டாக்கும். அதேபோல் வாழைப்பழத்தில் சர்க்கரை அளவும் அதிகமாக இருப்பதால் சில மணி நேரத்திலேயே உங்கள் உடலின் எனர்ஜி குறைந்து உங்களுக்கு சோர்வான உணர்வைத் தரும். 👉 குடல் புண், அல்சர் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிருங்கள். தயிர் : 👉 தயிர் ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் கூ...

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - முதல் அதிகாரம்

திருக்குறள் கடவுள்  வாழ்த்து - முதல் அதிகாரம்  1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி      பகவன் முதற்றே உலகு. உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.  2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்  நற்றாள் தொழாஅர் எனின். உரை: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.  3.மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்  நிலமிசை நீடுவாழ் வார். உரை: அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.  4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு  யாண்டும் இடும்பை இல. உரை: விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.  5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்  பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. உரை: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்து...

திருமணத்தின் பின் பெண்களின் பின்புறம் பெரிதாவது ஏன்?

Image
திருமணம் முடிந்த சில மாதங்களில் பெண்களின் உடல் எடை அதிகரிக்கும். திருமணத்தின் பின் அவர்களின் மீது அக்கறை எடுத்து கொள்ளமாட்டார்கள். உடல் பயிற்சி போன்றவற்றை செய்ய மாட்டார்கள். மேலும், அவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் திருமணம் சார்ந்த மன அழுத்தத்தின் காரணமாகவும் அவர்களின் உடல் எடை அதிகரிக்கும். அதே போல் திருமணத்தின் பின் பெண்களின் பின்புறம் ஏன் பெரிதாகிறது என இங்கு பார்க்கலாம். பின்புறம் பெரிதாவதற்கான காரணங்கள் 1 பெண்களின் சிறுவயதில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி குறைவாக இருப்பதாலும், கொழுப்புகள் பின்புறம் சேராமல் இருப்பதாலும் பெண்களின் பின்புறம் சரியான அளவில் இருக்கும். 2 அவர்கள் வளர்ந்து பருவ வயதை அடையும் போது, ஈஸ்ட்ரோஜென் மற்றும் பல ஹார்மோன் மாற்றங்களால் பின்பகுதி சிறிது அதிகரிக்க துவங்கும். அந்த சமயங்களில் பின்புறத்தில் சிறு சிறு கொப்பளங்கள் தோன்றும். 3 பெண்கள் திருமண வயதை அடையும் முன் அவர்களின் பின்பகுதி சரியான அளவில் வளர்ச்சி அடைந்திருக்கும். இதற்கு காரணம் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் ஒரு வகையே. 4 திருமணத்தின் பின் உடலுறவாலேயே பெண்களின் பின்புறம் பெரிதாகிறது என்பது உண்மை தான். உடலின...